• Apr 27 2024

பதான் படம் பார்த்த பின்னர் ஹிருத்திக் ரோஷன் சொன்ன கமெண்ட்...என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் படம் குறித்து நடிகர் ஹிருத்திக் ரோஷன் பதிவிட்டுள்ளார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகி உள்ளது. அத்தோடு 5 வருடங்களுக்கு பின்னர் ஷாருக்கான் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக பதான் அமைந்துள்ளது.

பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அத்தோடு பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.


அத்தோடு பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமான பதான் படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆகியுள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸின் Spy Universe படங்களில் நான்காவது படமாக பதான் படம் வெளியாகி உள்ளது. முன்னதாக சல்மான் கான்  ஏக் தா டைகர் (2012),  டைகர் ஜிந்தா ஹே (2017) ,  ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் (2019) திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படம் உருவாகியுள்ளது.


முன்னாள் ரா உளவு அமைப்பில் இருந்த ஜான் ஆபிரகாம் தேசத்திற்கு துரோகம் செய்யும் வகையில் அவரும் & அவரது குழுவினரும் இந்திய  விஞ்ஞானி ஒருவரை  குழு கடத்துகின்றனர்.மேலும் சின்னம்மை நோயை இந்தியாவில் பரப்ப திட்டமிடுகிறார்.மேலும் இந்த சதியை ஷாருக்கான் எப்படி முறியடிக்கிறார் என்பதே பதான் படத்தின் கதைக்கரு.


இவ்வாறுஇருக்கையில்  பதான் படம் குறித்து நடிகர் ஹிருத்திக் ரோஷன், "என்ன ஒரு பயணம். நம்பமுடியாத ஒளிப்பதிவு,  கட்டுக்கோப்பான திரைக்கதை, அற்புதமான இசை, ஆச்சரியங்கள் மற்றும் திருப்பங்கள் அனைத்தும் அருமை. சித்தார்த் ஆனந்த் நீங்கள் அதை மீண்டும் சாதித்து விட்டீர்கள், ஆதித்யா சோப்ரா உங்கள் தைரியம் என்னை வியக்க வைக்கிறது.அத்தோடு  ஷாருக், தீபிகா, ஜான் மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள். #பதான் 👊" என ஹிருத்திக் ரோஷன் பதிவிட்டுள்ளார்.


எனினும் தற்போது ஹிருத்திக் ரோஷன், சித்தார்த் ஆனந்த்  இயக்கத்தில் தீபிகா படுகோனே உடன் இணைந்து பைட்டர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement