• May 12 2024

விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் எதுவும் திருட்டு போகலையா?-வீட்டில் வேலை செய்பவர்கள் மீது வீண் பழி போட்டார்களா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல்யமான பாடகராக வலம் வருபவர் தான் யேசுதாஸ். ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இருக்கும் இவரது மகன் விஜய் யேசுதாஸ் அவர்களும் தமிழ் சினிமாவில் முக்கியமான பாடகராக வலம் வருகின்றார்.

இது தவிர சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் யேசுதாஸ் இறுதியாக தனுஷ் நடித்த மாரி திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த அந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.


விஜய் யேசுதாஸுக்கு சென்னை அபிராமிபுரத்தில் வீடு ஒன்று இருக்கிறது. சென்னை வரும்போது அவர் இந்த வீட்டில் தங்குவது வழக்கம். அவருடன் அவரது மனைவி தர்ஷனாவும் அங்பிருப்பது வழமை. இந்த நிலையில் அண்மையில் தர்ஷனா அபிராமிபுரம் வீட்டிலிருந்து 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போயிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக சொல்லப்பட்டது.

மேலும் தர்ஷனா அளித்த புகாரில், கடந்த வருடம் டிசம்பர் இரண்டாம் தேதி தங்க நகைகளை பார்த்தேன். அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் பார்த்தபோது வீட்டில் இருந்த நகைகளை காணவில்லை. இந்த நகைகள் காணாமல் போனதற்கும் வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோருக்கும் சம்பந்தம் இருப்பதாக சந்தேகம் இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

தர்ஷனா  அளித்த புகாரின் அடிப்படையில் அபிராமிபுரம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கின்றனர். அந்தவகையில் விஜய் யேசுதாஸின் வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமரா மற்றும் அவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதுமட்டுமின்றி வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களையும் நேரில் வரவழைத்து விசாரித்தனர்.


இதற்கிடையே நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு நம்பர் முறையில் பூட்டக்கூடிய பூட்டு இருக்கிறது. ஆனால் அந்தப் பூட்டும் உடைபடவில்லை என காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும் அந்த லாக்கிற்கான நம்பர் தர்ஷனாவுக்கும், விஜய் யேசுதாஸுக்கும் மட்டுமே தெரியும் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நகை திருடுபோனதாக கூறப்படும் நாளிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்தே புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இவர்கள் ஒருவேளை பொய் புகார் அளித்திருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணையை காவல் துறையினர் தொடங்கவிருக்கிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement