• May 19 2024

தாடி பாலாஜியின் மனைவி நித்யா கைது.. காரணம் அறிந்து ஷாக்கான ரசிகர்கள்.. தீயாய் பரவும் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தலை சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் தாடி பாலாஜி. அத்துடன் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் துணை காமெடி நடிகராக கலக்கியுள்ளார். அதன் பின்னர் வெள்ளித்திரையை அடுத்து சின்னத்திரையில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாடி பாலாஜி விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி நடுவராக இருந்தார்.


இவ்வாறாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காமெடியனாக நடித்து பாப்புலரான தாடி பாலாஜி, பிக்பாஸ் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் இவர் குடும்ப பிரச்சனைக் காரணமாக அவரது மனைவி நித்யாவிடம் இருந்து பிரிந்து வாழ்த்து வந்தார். அதாவது பாலாஜி போதைக்கு அடிமையானவர் என்றும், தன்னையும் மகளையும் குடித்துவிட்டு மோசமாக நடத்துகிறார் என நித்யா குற்றம் சாட்டி இருந்தார்.


இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நித்யாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டர். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இருவரும் ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு, மகள் போஷிகாவை பகடைக்காயாக பயன்படுத்தி நித்யா தன்னிடம் பணம் பறிக்க முயன்று வருவதாகவும் குற்றச்சாட்டுக்களை கூறினார். 


இதையடுத்து இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் தற்போது தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னையை அடுத்த மாதவரத்தில் தனது மகளுடன் வசித்து வருகிறார். இவரின் எதிர் வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்த நிலையில்,நேற்றைய தினம் நித்யா, எதிர்வீட்டு உரிமையாளரின் காரைக் கற்களால் தாக்கி சேதப்படுத்தி உள்ளார்.


காலையில் சேதப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த,எதிர்வீட்டுக்காரர் சிசிடிவியை ஆய்வு செய்தபோது, நித்யா காரை தாக்கியது அதன் மூலமாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிசிடிவி ஆதாரத்துடன் மாதவாரம் காவல் நிலையத்தில் நித்யாவுக்கு எதிராக புகார் ஒன்றினை அளித்தார்.


இதனைத் தொடர்ந்து போலீசார் பிறர் சொத்தை சேதப்படுத்திய பிரிவில் வழக்குப்பதிவு செய்து நித்யாவிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தின் பின் நித்யா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement