• Apr 27 2024

தன்னுடய வைரமுத்து பதிவில் சின்மயி போட்ட கமன்ட்...சரியான பதலடி கொடுத்த விஜே அர்ச்சனா ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வைரமுத்துவிடம் உஷாராக இருக்க வேண்டும் என்று சின்மயி போட்ட கமண்ட் குறித்து அர்ச்சனா  திருப்பி பதில் ஒன்று கொடுத்துள்ளார். ஆதித்யா தொலைக்காட்சியின் மூலம் Vjவாக அறிமுகமானர் அர்ச்சனா. அதன் பின்பு இன்ஸ்டா மூலம் இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நீயா நானா ஷோவிலும் பங்கேற்பாளர்களில் ஒருவராக அர்ச்சனா கலந்து கொண்டு இருந்துள்ளார்.. அதன் பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி இருக்கிறார். இருந்தாலும், இவருக்கு பேரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது  விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியல் தான்.

ஆனால், திடீரென்று இவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். மேலும் இவர் விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில் நடிகை அர்ச்சனா அவர்கள் கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்திருக்கிறார். அத்தோடு, இவர் வைரமுத்துவை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் ஒன்றில் அர்ச்சனாவின் தலையில் கை வைத்து வைரமுத்து ஆசீர்வதிப்பது போல் உள்ளது.மேலும் இந்த புகைப்படத்திற்கு சிலர் பாசிட்டிவான கமென்ட்ஸ், சிலர் நெகட்டிவான கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

இவ்வாறுஇருக்கையில்  இந்த புகைப்படம் குறித்து பாடகி சின்மயி கமெண்ட் ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், ஆரம்பத்தில் இதுபோலத்தான் அனைத்தும் இருக்கும். தயவு செய்து அவரிடம் கவனமாக இருங்கள். அவரை சந்திக்கும்போது யாரையாவது துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள்.


 அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள் என்று கமெண்ட்  ஒன்றை போட்டு இருந்தார்.இதனால் இந்த கமெண்டை அர்ச்சனா டெலிட் செய்திருக்கிறார். ஆனால், ஒரு சிலர் அர்ச்சனா டெலிட் செய்த கமெண்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூகவலைத்தளத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

 தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பணிப்போரே நடந்து கொண்டு உள்ளது. வைரமுத்து குறித்து இவர் கமெண்ட் செய்து கொண்டு தான் இருக்கிறார்.


இந்த நிலையில் பேட்டியொன்றில் பங்கேற்ற அர்ச்சனாவிடம் வைரமுத்து குறித்த பதிவில் சின்மயி போட்ட கமெண்ட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நான் எப்போதும் போல அதை பற்றி எதுவுமே பேசவில்லை. நான் அந்த பதிவை போட்டதற்கு காரணம் என்னுடைய தந்தை ஒரு தமிழ் பேராசிரியர். எங்கள் குடும்பத்தில் தமிழுக்கு ஒரு பெரிய முக்கியத்துவம் உள்ளது.

எல்லோரும் வைரமுத்து சாரருடைய சினிமா பாடலை தான் கேட்டிருப்பார்கள் ஆனால் நான் கேட்டது  இது தான்.எனக்கு மிகவும் பிடித்த பாடல் நாக்கு செவந்தவரை என்ற பாடல் தான் நான் படப்பிடிப்பில் இருந்த போது அவரை திடீரென்று மேடையில் சந்தித்ததும் நான் ஹாய் சார் எப்படி இருக்கிறீர்கள் நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகை என்று சொன்னதும் அவர் என்னை ஆசீர்வதித்தார். அவ்வளவுதான் நான் அவரிடம் பேசி இருந்தேன். எனக்கு சின்மயியை தனிப்பட்ட முறையில் யார் என்று தெரியாது. ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் அனைவரும் பேச தான் செய்வார்கள். அத்தோடு ஊர் வாயை நம்மால் அடைக்க முடியாத. இது ஒரு ஃபேன் கேர்ள் மொமென்ட்.. இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் பிடிக்காதவர்கள் அப்படியே போகட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.





Advertisement

Advertisement

Advertisement