• Oct 22 2024

ஹீரோயினை தொடவே விடவில்லை.. ’பன் பட்டர் ஜாம்’ ராஜூ பேச்சால் முகம் சுளித்த நாயகி..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ நடித்த ’பன் பட்டர் ஜாம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ராஜூ காமெடியாக ’படம் முழுவதும் ஹீரோயினை என்னை தொடவே விடவில்லை’ என்று பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் ஹீரோயின் இந்த பேச்சை கேட்டு முகம் சுளித்ததாகவும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மிகப்பெரிய திரை உலக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் குறிப்பாக டைட்டில் பட்டம் வென்றவர்கள் திரையுலகில் ஜொலிப்பார்கள் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் டைட்டில் பட்டம் வென்ற ஆரவ், ரித்திகா, முகின் ராவ், ராஜூ , ஆரி, அசீம் , அர்ச்சனா உள்ளிட்டோர் இன்னும் பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் தான் உள்ளனர் என்பது தான் நிஜமாக உள்ளது.



இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ நீண்ட காலம் போராடி 'பன் பட்டர் ஜாம்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் விழா நேற்று நடந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் ’இந்த படத்தில் பன் பட்டர் ஜாம் யார் என்ற கேள்வியை நிருபர் முன் வைத்தார். அதற்கு பதில் அளித்த ராஜூ ’பேரு தான் பன் பட்டர் ஜாம், ஆனால் என்னுடன் நடித்த ஹீரோயினை, இந்த படத்தின் இயக்குனர் தொடவே விடவில்லை’ என்று கூறினார்.

அவர் அப்படி கூறிய போது அருகில் இருந்த ஹீரோயின் பவ்யா முகம் சுளிப்பதை பார்க்க முடிந்தது. அதையடுத்து தான் பேசியது தவறு என்று உணர்ந்தது அதன் பின்னர் சமாளித்த  ராஜூ ’இந்த படத்தில் பன் என்பது இயக்குனர் தான், பட்டர் ஜாம் நாங்கள் இருவரும்’ என்று கூறி சமாளித்தார். ராஜூவின் இந்த சர்ச்சை பேச்சு திரை உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement