• May 19 2024

Biggboss-7 பெண் போட்டியாளர் மீது மீ டூ புகார்... விடயமறிந்து ஷாக்கில் பிக்பாஸ் ரசிகர்கள்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

ஆண்கள் மீது மட்டுமே கூறப்பட்டு வந்த, 'மீ டூ' புகார் சமீபகாலமாக நடிகையர் மீதும் திரும்பியுள்ளது. அந்தவகையில் 'வானவில்' என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். இதனைத் தொடர்ந்து ஜோதிகாவுடன் 'மகளிர் மட்டும்', சிவகார்த்திகேயனுடன் 'வேலைக்காரன்', விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது தற்போது தமிழ் பிக்பாஸ் சீசன் 7-இலும் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி இருக்கின்றார். இந்நிலையில் இவர் மீது மீடூ புகார் அளித்திருக்கின்றமை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது. 


அதாவது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் இவர் மீது பாலியல் தொடர்பான மீ டூ புகார் ஒன்றினை ஏற்கெனவே அளித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது  2016ல் மாயாவின் நாடக குழுவில் அனன்யா தனது 18 வயதில் சேர்ந்து கொண்டார். அப்போது மாயாவுக்கு 25 வயது.

இது தொடர்பாக அனன்யா கூறுகையில் "மாயா என்னை தன்னுடைய கட்டுப்பாட்டில் முழுவதுமாக வைத்திருந்தார். குறிப்பாக நண்பர்கள் யாருடனும் பேச அனுமதிக்கவில்லை, அதுமட்டுமல்லாது அவர்களிடம் என்னை தப்புத் தப்பாக சொல்லி இருக்கின்றார், அதாவது நான் ஒரு மோசமான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன் எனவும் கூறி இருந்தார்" என தெரிவித்திருந்தார்.


இதற்கு மாயா பதிலளிக்கையில் "என்னை பற்றி அனன்யா கூறியது எதுவும் உண்மையே இல்லை. இருப்பினும் இந்த வழக்கினை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். மேலும் என்னை பற்றி அவதூறு கிளப்பிய அனன்யா மீது வழக்கு தொடர்ந்து இருக்கின்றேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அனன்யா, மாயாக்கு இடையில் நிகழ்ந்து மீடு புகார் பிரச்சினை நடந்து முடிந்து 5வருடங்கள் கடந்து விட்ட நிலையில், மாயா பிக்பாஸில் களமிறங்கி இருப்பதைத் தொடர்ந்து மீண்டும் தலை தூக்கியுள்ளது.

Advertisement

Advertisement