• May 12 2024

பாக்கியாவிடம் கணேஷின் பெற்றோர் சொன்ன அதிர்ச்சித் தகவல்- செழியனை கலாய்த்துத் தள்ளிய ஜெனி- Baakiyalakshmi Serial

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கணேஷின் பெற்றோர் அவரைச் சந்தித்து வா வீட்டுக்கு போகலாம் என்று அழைக்கின்றனர். ஆனால் கணேஷ் அமிர்தா எங்க இருக்கிறா என்றே தெரியாது, போன் நம்பர் இல்லை என்ற என்கிட்ட எவ்வளவு பொய் சொன்னீங்க, அமிர்தா என் பொண்டாட்டி நிலா என்னோட குழுந்தை, அவ இப்போ கட்டியிருக்கிற கல்யாணம் செல்லாது.


நான் வந்தால் அமிர்தா கூட தான் வருவேன். அமிர்தாவையும் கூட்டிட்டு தான் வருவேன் என்று சொல்வதால் அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். தொடர்ந்து வீட்டில் எல்லோரும் பேசிட்டு இருக்கும் போது செழியன் பாப்பா வளர்ந்திட்டா எனறு சொல்ல, ஒரு வாரத்துக்குள்ள எப்பிடி வளருவா என அமிர்தா கேட்க, ஜெனி பாக்கியா எல்லோரும் செழியனைக் கலாய்க்கின்றனர்.

இந்த நேரம் பார்த்து மாலினி வருகின்றார். மாலினியைப் பார்த்ததும் செழியன் அதிர்ச்சியடைகின்றார். தொடர்ந்து அங்கு வரும் மாலினி புரஜெக்ட் இன்னும் ஒரு மாதத்தில முடிச்சாகனும் அதுக்கு டிஸ்கஸ் பண்ணனும் குழந்தை பிறந்ததில் இருந்து நீங்க பிஸியாகிட்டீங்க அதான் இங்கையே வைச்சு டிஸ்கஸ் பண்ணலாம் என்று வந்தேன் என்று சொல்கின்றார்.


இதனால் பாக்கியா பாட்டி ரூமுக்குள்ள போய் டிஸ்கஸ் பண்ணுங்க என்று அனுப்பி வைக்க,மாலினி செழியனுடன் பேசிக் கொண்டிருக்கின்றார். மறுபுறம் கிச்சனில் பாக்கியா நிற்கும் போது கணேஷின் பெற்றோர் போன் பண்ணி உங்களை அவசரமாக சந்திக்க வேண்டும் என்று சொல்ல பாக்கியாவும் சரி வருகின்றேன் என கிளம்பி போகின்றார்.


பின்னர் பாக்கியாவைச் சந்தித்த கணேஷின் பெற்றோர், கணேஷ் உயிரோட தான் இருக்கிறான் திரும்ப வந்திட்டான் என்று சொல்கின்றனர். இதைக் கேட்ட பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement