• May 17 2024

செழியனால் மீண்டும் ஒன்று சேர்ந்த பாக்கியா மற்றும் கோபி- செம சந்தோஷத்தில் இருக்கும் ஈஸ்வரி- ராதிகாவைத் திட்டிய அவரது அம்மா- Baakiyalakshmi Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஜெனிக்கு வலி வந்ததால் எல்லோரும் ஹாஸ்பிட்டலில் இருக்கின்றனர். ஜெனி வலி தாங்காமல் துடிப்பதைப் பார்த்து செழியன் அழுகின்றார். மேலும் ஜெனிக்கு நோர்மல் டெலிவரி ஆகும் ஆனால் கொஞ்சம் லேட் ஆகும் என்று என்று டாக்டர் சொல்கின்றார்.மெறுபுறம் ஜெனிக்கு குழந்தை பிறந்து விட்டதோ என்று தெரியாமல் வீட்டில் ராமமூர்த்தியும் அமிர்தாவும் யோசிச்சுக் கொண்டிருக்கின்றனர்.


அப்போது இனியாவுக்கு கோபி போன் பண்ணி நலம் விசாரிக்கின்றார். அப்போது ஜெனியை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கும் விஷயத்தைச் சொல்கின்றார். இதைக் கேட்டு சந்தோஷமடையும் கோபி இனியாவையும் கூட்டிட்டு ஹாஸ்பிட்டலுக்கு போக சம்மதிக்கின்றார். மறுபுறம் ஜெனி வலியால் துடிப்பதைப் பார்த்த செழியன் அழுது கொண்டே இருக்கிறார்.

என்னால தான் எல்லாம் ஆகிடுச்சு, இனிமேலும் யாராவது குழந்தை பெத்துக்க சொன்னால் அவ்வளவு தான் என்கின்றார்.இதைக் கேட்ட பாக்கியா நீ ஜெனிக்கு பக்கத்தில இருந்தால் அவளை பயமுறுத்திட்டு இருப்ப வெளிய வோடா என்று கூட்டிட்டு போகின்றார்.அப்போது கோபியும் வந்து விட ஈஸ்வரி விஷயத்தைச் சொல்ல கோபி செழியனை சமாதானப்படுத்துகின்றார்.


மேலும் செழியனுக்கு அருகில் இருந்து பாக்கியாவும் கோபியும் சமாதானப்படுத்துவதைப் பார்த்த ஈஸ்வரி அம்மா அப்பா மகன் என்று இந்தக் குடும்பத்தை பார்க்க எவ்வளவு சந்தோசமாக இருக்கு என்கின்றார். அப்போது டாக்டர் வந்து ஜெனிக்கு பெண் குழந்தை பிறந்து விட்டதாகச் சொல்கின்றார்.இதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.


கோபி ஹாஸ்பிட்டல் முழுக்க சுவிட்ஸ் வாங்கிக் கொடுத்து விட்டு ராதிகாவுக்கு போன் பண்ணி சொல்கின்றார். அத்தோடு தான் ஹாஸ்பிட்டலில் இருந்து விட்டு வருகின்றேன் என்றும் சொல்கின்றார். அதற்கு ராதிகா ஓகே சொல்லிட்டு வைக்க ராதிகாவின் அம்மா ராதிகாவை பேசுகின்றார். குழந்தை பிறந்தால் போய் பார்த்திட்டு வரவேண்டியது தானே, எதுக்காக அங்கையே நிற்கனும். சீக்கிரமா வரச் சொல்லு என்கின்றார். மேலும் செழியன் சொந்தமில்லை என்றும் மயூகிட்ட சொல்ல ராதிகா குழந்தைகள் கிட்ட எதுக்காக அப்பிடிப் பேசுற என்று திட்டுகின்றார்.


தொடர்ந்து ஜெனியை எல்லோரும் சென்று பார்க்க கோபி எல்லோருக்கும் சுவிட்ஸ் கொண்டு வந்து கொடுக்கின்றார்.பின்னர் எல்லோருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வருகின்றேன் என்று போகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement