• May 09 2024

Relationship பற்றி கேட்கிறீர்களா அதை எப்பிடி மறக்க முடியும்- உருக்கமாகப் பேசிய சமந்தா- அப்போ நாகசைத்தன்யாவை இன்னும் மறக்கலையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தாவின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களிலும் பாலிவூடிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் சமந்தா.

பாலிவூட்டில் தி பேமிலி மேன் 2 படத்தை கொடுத்த டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் அடுத்த வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக சமந்தாவின் சகுந்தலம் படம் ரிலீசாகவுள்ளது. இதனால் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.


சமந்தா அவரது சொந்த வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். காதலித்து திருமணம் செய்த நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தது, அதன் பின் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதனுடன் போராடி வருகிறார்.

ஒரு தெலுங்கு இணையதளத்திற்கு சமந்தா அளித்த பேட்டியில் 'உங்கள் வாழ்க்கையில் நடந்த எந்த விஷயத்தையாவது மறக்க விரும்புகிறீர்களா?' என கேள்வி கேட்டிருக்கிறார்கள்.Relationship பற்றி கேட்கிறீர்களா என சமந்தா கேட்க, 'எந்த விஷயமாகவும் இருக்கலாம்' என தொகுப்பாளர் விளக்கம் கொடுக்கிறார்.


"நான் எந்த விஷயத்தையும் மறக்க விரும்பவில்லை. ஒவ்வொரு விஷயமும் எனக்கு வாழ்க்கையில் பாடம் கற்றுக்கொடுத்து இருக்கின்றன. அதனால் எதையும் மறக்க மாட்டேன்" என சமந்தா கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement

Advertisement