• Apr 28 2024

விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாகத் தான் ஊர் சுற்றுகின்றார்களா?- உண்மையை உடைத்த பயில்வான்

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தான் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.இதனை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் பேச்சு வார்த்தைகளுக்காக வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி உடன் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார்.

மேலும் அண்மையில் நாடு திரும்பிய இவர் தன்னுடைய அப்பாவிற்கு உடல் நிலை சரி இல்லாததால் நேரில் சென்று பார்த்திருந்தார். இது குறித்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.


தளபதி 68 படத்திற்காக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் வெங்கட் பிரபுவுடன்  விஜய் அமெரிக்காவுக்கு சென்றிருந்த போது அங்கே, டீஏஜிங் தொழில்நுட்பத்திற்கு விஜய் ஸ்கேனிங் செய்து வந்தார்.வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி சென்னை திரும்பிய நிலையில், நடிகர் விஜய் தனது குடும்பத்தை பார்க்க லண்டனுக்கு தான் போயிருந்தார். 

ஆனால், நடிகை த்ரிஷாவுடன் நெதர்லாந்தில் நடிகர் விஜய் டூர் அடித்து வருகிறார் என்றும் விஜய்யும் சங்கீதாவும் பிரிந்து விட்டனர் என்றும் வாய்க்கு வந்தபடி யூடியூப்களில் படுமோசமாக பேசி வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் நடிகை த்ரிஷாவுடன் விஜய் இருந்த புகைப்படம் ஒன்று வெளியானது. அந்தப் புகைப்படம்.

 லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தயாரிப்பு நிறுவனமே கூறிவிட்டது. அதை வைத்துக் கொண்டு தான் ஏகப்பட்ட கதைகளை சமூக வலைத்தளங்களில் கிளப்பியுள்ளனர்.ஆனால், அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. விஜய் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எப்போதும் போல சந்தோசமாகத்தான் வாழ்ந்து வருகிறார் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


சமீபத்தில், விஜய் ரசிகர்களின் கோபத்தை தூண்டியது இயக்குநர் மிஷ்கின் தான். தளபதி என விஜய்யை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், மிஷ்கின் தேவையில்லாமல் விஜய்யை ஒருமையில் பேசியது தவறு அதற்கு பதிலடி கொடுக்கத்தான் விஜய் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்தனர் என்றும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement