• Apr 27 2024

பாட்டி ஒருவரை ரகசியமாக போட்டுத் தள்ளிய எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து- விழுந்து விழுந்து சிரித்த எஸ்.ஜே சூர்யா

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் எஸ்ஜே சூர்யா. முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுக் கொடுத்ததைத் தொடர்ந்து குஷி, நியூ, அ.. ஆ.., இசை போன்ற படங்களை இயக்கியிருக்கின்றார். மேலும் தற்பொழுது நடிகராகவும் களமிறங்கியுள்ளார்.

கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார்.தமிழ், தெலுங்கு மொழி படங்கள் மட்டும் இல்லாமல், வெப் சீரியல்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.எஸ்ஜே சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு பிரபல யூடியூப் சேனலுக்கு எஸ்ஜே சூர்யா பேட்டிக் கொடுத்துள்ளார். 


அப்போது எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்துவும் எஸ்ஜே சூர்யாவுடன் பங்கேற்றிருந்தார். இருவருமே இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள் .  மாரிமுத்து, சில படங்களில் நடித்திருந்தாலும் இப்போது அவர் நடித்து வரும் எதிர்நீச்சல் சீரியல் தான் இவருக்கு நல்லதொரு அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

 இந்நிலையில், எஸ்ஜே சூர்யாவுடன் பேட்டியில் பங்கேற்றிருந்த மாரிமுத்து ஆசை படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் குறித்து மனம் திறந்தார். அதாவது ஆசை படத்தில் அஜித்தும் சுபலட்சுமியும் நடித்த ஒரு காட்சியின் பின்னணியில்  இந்தியன் பாட்டி ஒருவரை நிற்க வைத்திருந்தார்களாம். மீண்டும் ஒருமுறை அதுமாதிரி ஒரு சீன் எடுக்க வேண்டும் என மாரிமுத்துவிடம் வசந்த் கூறியுள்ளார். அதனால், அந்த பாட்டியை தேடிப் பிடித்து கூட்டி வரச் சொல்லியிருந்தாராம். ஆனால், மாரிமுத்து அந்த பாட்டி இறந்துவிட்டதாக பொய்சொல்லிவிட்டு வீட்டில் படுத்து தூங்கிவிட்டாராம். மாரிமுத்து சொன்னதை உண்மை என நம்பிய வசந்த் மறுநாள் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார். அப்போது அந்த பாட்டி எதார்த்தமாக வந்து இயக்குநர் வசந்துக்கு வணக்கம் கூறியுள்ளது.


இதனைப் பார்த்து அதிர்ச்சியான மாரிமுத்து, வசந்திடம் போய் உண்மையை சொல்லிவிட்டாராம். இந்தச் சம்பவத்தை எப்போதுமே மறக்க முடியாது என  சொல்ல எஸ்ஜே சூர்யா விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து பேசிய மாரிமுத்து, வாலி படத்தில் சம்பளமே வாங்காமல் இயக்கிக் கொடுத்தார் எஸ்ஜே சூர்யா. அந்தப் படம் ஹிட்டானதால் தான் அடுத்து விஜய் நடிப்பில் குஷி படத்தை இயக்கினார். மேலும், குஷி படத்தை இயக்குவதற்காக எஸ்ஜே சூர்யாவுக்கு சில லட்சங்கள் அட்வான்ஸாக கிடைத்ததாம்.

அந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவரிடம் இருந்த 7 உதவி இயக்குநர்களுக்கும் பைக் வாங்கிக் கொடுத்துள்ளார் எஸ்ஜே சூர்யா. தனக்காக எதுவும் எடுத்துக்கொள்ளாமல் அட்வான்ஸ் பணத்தை உதவி இயக்குநர்களுக்காக செலவு செய்ய பெரிய மனது வேண்டும் என மாரிமுத்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement