• May 18 2024

மீண்டும் அனிருத்-தனுஷ் கூட்டணிக்குள் பிரிவா..? ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ்-அனிருத் ஆகியோரின் நட்பைத் தாண்டி இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு என்று ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. அந்தவகையில் 3 படத்தின் மூலம் அனிருத்தை ஒரு இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தவர் தனுஷ் தான்.


இதனைத் தொடர்ந்து பின்னர் 'எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மாரி' என பல படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அனிருத் மளமளவென ஹிட் கொடுத்து இன்று முன்னணி இசையமைப்பாளர்  என்றளவிற்கு உயர்ந்துள்ளார்.


இவ்வாறாக சினிமாவில் பிசியாக இருக்கும் அனிருத் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் என்ற படத்தின் மூலம் இணைந்தார். அதாவது தங்கமகன் படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணி ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் திருச்சிற்றபலம் படத்தின் மூலம் இணைந்து கொண்டது.

ஆனால் இடையில் சில பல கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்களது கூட்டணி இணையாமல் இருந்தது. இதனால் ரசிகர்களும் இவர்களின் கூட்டணியை ரொம்பவே மிஸ் செய்தனர். பின்னர் அனிருத் தொடர்ந்து தனுஷின் படங்களுக்கு இசையமைப்பார் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு வருத்தமான செய்தி வந்துள்ளது. 


அதாவது தனுஷின் ஐம்பதாவது படத்திற்கு அனிருத் இசைமைக்கவில்லையாம். குறிப்பாக பல மொழிகளில் பல படங்களில் பிசியாக அனிருத் இருப்பதால் தான் தனுஷின் படத்திற்கு இசையமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement