• May 18 2024

பாக்கியாவுக்கு அதிர்ச்சி தகவலைச் சொன்ன அமிர்தாவின் அம்மா- ராதிகாவை பார்க்க வந்த வந்த கோபி- மயூவை திட்டிய ஈஸ்வரி- Baakiyalakshmi Serial

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

சென்னைக்கு கணேசைத் தேடி அமிர்தாவின் அம்மா வருகின்றார். அவர் கணேஷின் பெற்றோரிடமும் கணேஷிடமும் இங்க எதுக்காக வந்தீங்க, இரண்டு வருசமாக அழுது முடிச்சிட்டு இப்போ தான் சந்தோசமாக ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிருக்கிறா, அவளுடைய வாழ்க்கையை குழப்பனுமா தயவு செய்து இங்க இருந்து போங்க என்கின்றார்.


அப்போது கணேஷ் நிலா என் குழந்தை அவளையும் அமிர்தாவையும் கூட்டிக் கொண்டு தான் நான் இங்க இருந்து போவேன், அவங்க இரண்டு பேரும் இல்லாம நான் இங்க இருந்து போகமாட்டேன் என்று சொல்ல கணேஷின் அம்மாவும் நாங்க இது சம்மந்தம்மாக பாக்கியா கிட்டையும் பேசியிருப்பதாக சொல்ல அவர் அதிர்ச்சியடைகின்றார்.

பின்னர் பாக்கியா வீட்டில் எல்லோரும் இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது அமிர்தாவின் அம்மா இங்கே வருகின்றார். ஜெனியின் குழந்தையைப் பார்த்து விட்டு அவருக்கு, குழந்தைக்கு வளையல் வாங்கிட்டு வந்ததாகச் சொல்கின்றார். தொடர்ந்து எல்லோரிடமும் பேசிவிட்டு அமிர்தாவிடம் தனியாகச் சென்று பேசுகின்றார்.


நீ சந்தோசமாக இருக்கிறியா, இப்போ இருக்கிற மாதிரி எப்பவும் இருக்க வேண்டும் என்றும் சொல்கின்றார். அந்த நேரம் பாக்கியா உள்ளே வர அமிர்தா வெளியே போக அவர் கணேஷ் விஷயம் பற்றி பேசுகின்றார். கணேஷ் செத்து போய்ட்டார் என்று நினைச்சு தானே எழிலை கல்யாணம் பண்ணினா இப்போ திரும்ப கணேஷ் கிட்ட போகனும் என்றால் எப்படியுங்க, அவ என்ன விளையாட்டு பொம்மையா என்று கேட்கின்றார்.

இதனால் பாக்கியா கவலைப்படாதீங்க அமிர்தா இங்க சந்தோசமாகத் தான் இருக்கிறா, அப்படி எதுவும் தப்பாக நடக்காது என்று ஆறுதல்ப்படுத்தி அனுப்புகின்றார். தொடர்ந்து இரவு ஆனதும் கோபி ராதிகா வீட்டுக்கு வருகின்றார்.அப்போது ராதிகா திட்ட கோபி உடம்பு சரி ஆகும் வரை தானே அங்கே இருக்க போறேன். இன்னும் ஒரு வாரத்தில இங்க வந்திருவேன் ராதிகா என்று கோபி சமாதானம் செய்ய அந்த நேரம் ஈஸ்வரி வருகின்றார்.


அங்கு வந்த ஈஸ்வரி,கோபியைத் திட்ட அந்த நேரம் மயூ டாடி என்று சொல்ல,ஈஸ்வரி யாருக்கு யாரு டாடி என்று மயூவைத் திட்ட ராதிகா உங்க பையனைத் தானே கூப்பிட வந்தீங்க கூட்டீட்டு போங்க என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.




Advertisement

Advertisement