• Apr 28 2024

பணம் கொடுத்து உதவியும் பலனில்லை... பிணத்தைத் தூக்கிய அஜித்.. பலநாள் கழித்து வெளிவந்த தகவல்.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். தமிழகம் மட்டுமன்றி முழுவதும் மிக பெரிய நட்சத்திர பட்டாளம் வைத்துள்ள இவரின் திரைப்படம் வெளியானால் திரையரங்கமே திருவிழா போல காட்சியளிக்கும். 

அந்தவகையில் கடைசியாக இவரின் நடிப்பில் 'வலிமை' திரைப்படம் வெளியானது. அப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் அஜித் நடித்து வருகின்றார். இதனை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


அஜித்தைப் பொறுத்தவரையில் இவர் வெளியுலகிற்கு தெரியாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அதுகுறித்த தகவல்கள் காலம் கடந்தும் வெளியாவது வழமை. அவ்வாறான ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. 


அதாவது ஒரு முறை பல ஆண்டுகளுக்கு முன் செய்தியாளர் ஒருவருக்கு மருத்துவ உதவிக்காக குறிப்பிட்ட தொகைப் பணம் தேவைப்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட அஜித் உடனடியாக அந்த தொகையை கொடுத்து அவருக்கு உதவியுள்ளார். ஆனாலும், துரதிஷ்டவசமாக அந்த செய்தியாளர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளரின் உடலை அவருடைய வீட்டிற்கு ஆம்புலன்சில் வைத்து எடுத்து சென்றுள்ளனர். மேலும் அவருடைய நண்பர்கள் உடலை தூக்கி செல்லும் போது அஜித்தும் அந்த செய்தியாளரின் உடலை தூக்கி சென்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement