• Apr 26 2024

தந்தையின் இறுதிச் சடங்கை நிறைவேற்றிய அஜித்தின் நெகிழ்ச்சி செயல்..சொன்ன ஒரு வார்த்தையில் கவலையில் காவலர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலை மரணமடைந்தார்.85 வயதாகும் இவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.அஜித் தந்தை உடலுக்கு திரையுலக சேர்ந்த ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய், மகிழ் திருமேனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


இந்நிலையில், அஜித் குமார் தந்தையின் இறுதி சடங்குகள் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் நடைபெற்றது. இதில் தகனம் செய்யும் இடத்தில் நடிகர் அஜித் தனது தந்தையை இறுதியாக பார்த்துக் கொண்டிருந்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருந்தது.தொடர்ந்து அஜித்தின் அம்மாவும் இறுதிச் சடங்களில் கலந்து கொண்டிருந்தார்.


மேலும் இறுதிச்சடங்கை முடித்து விட்டு அஜித் வீடு திரும்புத் போது அவர் பாபுகாப்புத் தந்த காவலர்களுக்கு கையெடுத்து கும்பித்து தனது நன்றியையும் தெரிவித்தார். இவ்வளவு பெரிய சோகத்திலும் அவரது நன்றியுணர்வைப் பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement