தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பினால் ஹீரோவாக வெற்றிக் கொடியை நாட்டி இருப்பவர் அஜித். இவரின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு என ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உண்டு.
அந்த வகையில் இவர் நடிப்பில் அடுத்ததாக 'துணிவு' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படமானது வருகிற ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
தன்னுடைய 61 ஆவது படமான 'துணிவு' படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் 'ஏகே 62'. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் பிரமாண்டமாக இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் விதமாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் முடிந்த கையோடு, நடிகர் அஜித் 62 நாடுகளுக்கு உலகச் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ள உள்ளாராம்.
இதனால் கிட்டத்தட்ட 18 மாதங்கள் எந்த ஒரு படத்தின் உடைய படப்பிடிப்பிலும் அஜித் பங்கேற்றுக்கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஏகே 62 படத்திற்கு பிறகு பெரிய இடைவேளைக்கு பின் தான் அஜித் மீண்டும் நடிப்பார் என்பது இதன் மூலமாகத் தெரிகின்றது.
அஜித் இவ்வாறு 18 மாதங்களிற்கு படப்பிடிப்புக்கு பிரேக் விடவுள்ளமை அறிந்து ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர். ஏனெனில் அஜித்தின் அடுத்தடுத்த படங்களை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த விஷயம் சற்று ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கின்றது.
Listen News!