• May 09 2024

கதறி அழுத ஐஸ்வர்யா...சொத்து விஷயத்தில் ஜனார்த்தனன் எடுத்த திடீர் முடிவு...இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்...

ஆரம்பத்தில் ஐஸ்வர்யா மண்டபத்தில் மல்லி மற்றும் அவருடைய சித்தி சொன்ன வார்த்தையை நினைத்து பார்த்து  கண்ணீர்வடித்து அழுது கொண்டிருக்கிறார். பக்கத்தில் உட்கார்ந்து இருந்த கண்ணன் முதலில் கவனிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருக்க பின்னர்  என்னவென்று ஐஸ்வர்யாவிடம் கேட்க எனக்கு பிரசவம் பார்க்க யாரும் இல்லையே என்று ஐஸ்வர்யா சொல்கிறார்.

இதன் பிறகு அதற்குத்தான் தனம் அண்ணி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாங்களா? என்று சொல்ல, அதெல்லாம் சும்மா சொல்லுவாங்க என்று சொல்ல, இல்லை அவங்க அப்படி கிடையாது என்று கண்ணன் சொல்ல, அவங்களும் கர்ப்பமாக இருக்கிறார்கள். அவங்க எப்படி நமக்கு பார்ப்பாங்க என்று கேட்டுக் கொண்டிருக்க, அது அப்போ பாத்துக்கலாம் கண்டிப்பா நமக்கு ஒன்னுனா பார்ப்பாங்க என்று கண்ணன் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்துகிறார்.

அடுத்ததாக மீனாவின் வீட்டில் மீனாவின் அப்பா வக்கீலை வீட்டிற்கு அவர சொல்லி இருக்கிறார்.அத்தோடு  நான் சொன்னபடி எல்லாம் செய்து இருக்கீங்களா? என்று கேட்டுக் கொண்டிருக்க, வீட்டில் இருக்கும் அனைவரும் என்னவென்று கேட்க என்னுடைய பெயரில் இருக்கும் சொத்து எல்லாத்தையும் உயில் எழுதி மாப்பிள்ளை பெயருக்கு மாற்றி விட்டேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதன் பின்னர்  எதற்காக இப்பவே இப்படி பண்றீங்க என்று மீனா கேட்க, எனக்கு உடல்நிலை இப்பவே சரி இல்லாம போயிட்டு, அதனால நான் நல்லா இருக்கும் போதே எல்லாம் மாத்திடனும் நினைச்சேன் என்று கூறுகிறார். ஜீவா எதுக்காக என் பேருக்கு சொத்தை மாத்துனீங்க? மீனா பெயரில் மாற்றி இருக்கலாம் என கூற, நீங்க இந்த சொத்தை பல மடங்கு பெருக்கணும் உங்க மேல நம்பிக்கை இருக்கு என்று ஜனார்த்தனன் சொல்கிறார்.

ஜனார்த்தனன் போன பின்னர் கையில் சொத்து பத்திரத்தை வைத்துக்கொண்டு ஜீவா ஜனார்த்தனன் பேசியதை நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக புதியதாக கட்டும் வீட்டில் நின்று கொண்டு கதிர் ஆரம்பத்தில் இதே இடத்தில் மொத்த குடும்பமும் நின்று கொண்டிருந்ததை நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். மூர்த்தி வீட்டை நினைத்து புலம்பி கொண்டு இருக்க, எல்லாரும் மீண்டும் வந்து விடுவார்கள் என்ற கதிர் சமாதானம் படுத்துகிறார்.இதன் பிறகு எல்லோருக்கும் பிடித்த கலரிலே பெயிண்ட் அடிக்க சொல்லி மூர்த்தி கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement