• Apr 28 2024

மோசடி நபரைக் காதலித்து கருக்கலைப்பு செய்த நடிகை ஜாக்குலின்- விசாரணையில் வெட்ட வெளிச்சமான உண்மைகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் சினிமா பிரபலங்கள் என பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளார்.தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி உள்ளிட்ட பல நடிகைகளுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. நடிகைள் பலருக்கும் கோடிக்கணக்கில் பரிசு பொருட்களை வாரியிறைத்து அவர்களை சுகேஷ் சந்திரசேகர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் தெரியவந்தது. 


குறிப்பாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸுடன் சுகேஷ் சந்திர சேகர் ரொம்பவே நெருக்கமாக இருந்துள்ளார்.இருவரும் ஸ்டார் ஹோட்டல்களில் நெருக்கமாக இருந்ததும் போட்டோக்கள் மூலம் தெரியவந்தது. ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்குதான் அதிகம் செலவு செய்து பல கோடிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கியிருந்தார் சுகேஷ் சந்திரசேகர்.

 ஜாக்குலினுக்கு மினி ஹுப்பர் கார், குதிரை, விலை உயர்ந்த நகைகள், காலணிகள், ஹேண்ட் பேக்குகள் என சுமார் 8 கோடி ரூபாய்க்கு பரிசுகளை சுகேஷ் சந்திரசேகர் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.சுகேஷ் தனக்கு எப்படி அறிமுகமானார்? தங்களுக்குள் என்ன உறவு இருந்தது என்பது குறித்து சமீபத்தில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.


 அப்போது சுகேஷ் தன்னை சன் டிவியின் உரிமையாளர் என்றும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய தீவிர ரசிகர் என்றும் தான் தயாரிக்கும் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றும் கூறினார் என்றும் தெரிவித்தார்.

மேலும் சுகேஷ் தனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என்றும் தனது வாழ்வாதாரத்தை அழித்து விட்டார் என்றும் கூறினார். இந்நிலையில் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் சுகேஷ் சந்திரசேகரால் கர்ப்பமாகி பின்னர் கருக்கலைப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஓவர் சீஸ் சென்சார்போர்டு உறுப்பினரும் திரைப்பட விமர்சகருமான உமர் சந்த் என்பவர் பதிவிட்டுள்ள  டுவிட்டில் இந்த ஷாக்கிங் தகவலை தெரிவித்துள்ளார்.


இதனிடையே நடிகை சாகத் கன்னாவும் நீதிமன்றத்தில் ஆஜராகி சுகேஷ் சந்திர சேகர் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் சுகேஷ் சந்திரசேகரை தான் திகார் சிறையில் சந்தித்ததாகவும் அப்போது தன்னுடைய சீரியல்கள் பிடிக்கும் என்று கூறி சுகேஷ் சந்திர சேகர் தன்னிடம் மண்டியிட்டு ப்ரபோஸ் செய்ததாக தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement