• May 10 2024

தீபாவைக் கண்டுபிடிக்க நட்சத்திரா வரவழைத்த பாம் ஸ்குவாட்..கார்த்திக் போட்ட புதிய திட்டம் அதிர்ச்சியில் அபிராமி

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் தினதும் 9மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கார்த்திகை தீபம். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

நட்சத்திராவின் பெற்றோர்கள் திருடிய பொருளை கண்ட தீபா அந்த பொருளை யாருக்கும் தெரியாமல் அபிராமி வீட்டில் வைத்து விட அவர்கள் வந்து பார்க்க பொருள் இல்லாமல் இருக்க ஏமாந்தபடி போகின்றனர்.அடுத்து நலுங்கு பங்க்ஷன் ஆரம்பிக்க நட்சத்திராவையும் கார்த்தியும் சேரில் அமர வைத்து அனைவரும் நலங்கு வைக்க மேலிருந்து தீபா பார்த்து ரசிக்கிறாள். அனைவரும் பாட்டு பாட அப்போது நட்சத்திரா தன் காதலனுக்கு போன் செய்ய நட்சத்திரா டூப்ளிகேட் போலீஸ் பாம்ஸ் ஸ்குவார்ட்டை நலுங்கு நடக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்க சொல்கிறாள்.


உள்ளே வந்த ஆட்கள் வீட்டில் பாம் இருப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகி வெளியே வந்து விட உள்ளே பாம் தேட போக அதிர்ச்சியாகும் தீபா ரூமில் மறைந்து கொள்கிறாள். வெளியே வந்து அனைவரும் காத்திருக்க கார்த்திக் பின்பக்கமாக சென்று தீபாவை தன் ரூமில் இருந்து அழைத்து வந்து யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடியில் இருக்க சொல்கிறான்.

பாம்ஸ் குவாட் ஆட்கள் வீடு முழுவதும் தேடிவிட்டு கீழே வந்து யாரும் இல்லை என்று சொல்ல நட்சத்திராவிற்கு அதிர்ச்சி. நட்சத்திரா உடனே மாடியில் பார்த்தீர்களா என்று சொல்ல ஆட்கள் மாடியை நோக்கி போக தீபா அவர்கள் வருவதை அறிந்து மேலே உள்ள தண்ணீர் டேங்க்குள் உள்ளே ஒளிந்து கொள்கிறாள்.அவர்கள் தேடிவிட்டு மொட்டை மாடியில் இல்லை என்று கீழே சொல்ல நட்சத்திராவுக்கு மீண்டும் அதிர்ச்சியடைகிறார், பிறகு மன்னிப்பு கேட்டு விட்டு அவங்க செல்ல கார்த்திக் அவர்கள் எந்த ஸ்டேஷன் என்று விசாரிக்கிறான்.

பிறகு மீண்டும் பங்க்ஷன் ஆரம்பிக்க அபிராமி மீனாட்சியிடம் கங்கண கயிரை எடுத்துட்டு வர சொல்ல மீனாட்சி பூஜை ரூம் வந்து பார்க்க அங்கு கயிறு இல்லாமல் இருக்க அபிராமி இடம் வந்து சொல்ல அபிராமி கோபப்படுகிறாள்.


பிறகு கார்த்திக் வேக வேகமாக மேலே சென்று டேங்கிற்குள் ஒளிந்துள்ள தீபாவை காப்பாற்றி உள்ளே அழைத்து வந்து நனைந்த உடையை மாற்ற சொல்கிறான். பிறகு கார்த்திக் யோசித்தபடி இருக்க தீபா வெளியே வந்து என்னவென்று கேட்க இல்ல நீங்க இங்க இருக்கிறதாக யாருக்கோ சந்தேகம் வந்திருக்கு, அதனால தான் செக் பண்ண சொல்லி இருக்காங்க இதுக்கு அப்புறம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டும் என்று சொல்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஷு தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Advertisement

Advertisement

Advertisement