• Jul 27 2024

வயதுக்கு வந்த மகன்கள் முன் இப்படியா குளிப்பது? பிரபல நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை சுற்றுலா சென்ற போது அருவியில் கிளாமர் உடை அணிந்து குளிக்கும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வயதுக்கு வந்த மகன்கள் முன் ஒரு அம்மா இப்படியா குளிப்பது? என்று கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் வில்லி கேரக்டரில் நடிக்கும் நடிகை அனுசுயா பரத்வாஜ் ’ரங்கஸ்தலம்’ ’யாத்ரா’ ‘தேங்க்யூ பிரதர்’ ’கில்லாடி’ ’மைக்கேல்’ ’புஷ்பா’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில் தனது அண்ணனை கொன்று விட்ட புஷ்பாவை பழிவாங்கும் தாட்சாயணி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அனுசுயா கடந்த 2010 ஆம் ஆண்டு பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு கிட்டத்தட்ட 12 வயதுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் விவரம் தெரிந்த பையன்கள் இருவரும் உள்ளனர்.

இந்த நிலையில் அனுசுயா சமீபத்தில் சுற்றுலா சென்ற போது அங்கு அவர் தனது குடும்பத்தினருடன் அருவியில் குளிக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.  அவர் கிளாமர் உடை அணிந்து குளிக்கும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மகன்கள் இருவரும் பெரிய பையன்களாக இருக்கும் நிலையில் அவர்கள் முன் இப்படியா உடை அணிந்து குளிப்பது? என்று கண்டனங்கள் குவிந்து வருகிறது. மேலும் ஃபோட்டோகிராபர் கொடுத்து வச்சவன் என்றும் அனுசுயாவின் குளியல் புகைப்படத்தை ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார் என்றும் கமெண்ட்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement