• Apr 27 2024

கொடூரமாகத் தாக்கிய முன்னாள் காதலன்.. உடலில் பலத்த காயங்களோடு நடிகை அனிகா.. பரபரப்பில் திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள நடிகைகளில் ஒருவாராகத் திகழ்ந்து வருபவர் அனிகா விக்ரமன். இவர் 'கே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் 'எங்க பாட்டன் பார்த்தியா.' விஷமக்காரன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் நடிகை அனிகா விக்ரமன், தனது முன்னாள் காதலன் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவாறு துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டி உள்ளார். அதாவது தனது முன்னாள் காதலர் அனூப் பிள்ளை தன்னை அடித்ததாக கூறியுள்ளார். 


இது குறித்து காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தற்போது அனிகா பகிர்ந்துள்ள குறிப்பு கூறுகிறது. அதில் அவர் குறிப்பிடுகையில் "பல ஆண்டுகளாக அனூப் பிள்ளை மனதளவிலும், உடலளவிலும் என்ன்னை துன்புறுத்து வந்தார். அவர் என்னை இரண்டாவது முறையாக துன்புறுத்தியபோது, பெங்களூரு போலீசில் புகார் அளித்தேன். முதலில் சென்னையில் வைத்து என்னை அடித்தார். அன்று அவர் அழுது புலம்பி கெஞ்சி கேட்டதால் நான் புகார் அளிக்கவில்லை" என்கிறார்.


மேலும் "அப்போது நான் முட்டாளாக இருந்தேன். இரண்டாவது முறையாக அவர் என்னை அடித்த போது நான் புகார் அளித்தேன், ஆனால் அவர் போலீசாரிடம் பணம் கொடுத்து அந்தப் புகாரில் என்னை சிக்க வைத்தார். போலீசார் தன்னுடன் இருப்பதாக நினைத்து அவர் தொடர்ந்து என்னை அடித்து துன்புறுத்தினார். நான் படப்பிடிப்பிற்கு செல்வதை தடுக்க எனது செல்போனை தூக்கி எறியும் அளவிற்கு சென்றார். 

அதுமட்டுமல்லாது ஐதராபாத் செல்வதற்கு முன், எனது போனை ஆப் செய்து விட்டு என்னை உடல் ரீதியாக பலவாறு தாக்கினார். அவர் என் மேல் ஏறி அமர்ந்தார். வாய் மற்றும் மூக்கில் தாக்கினார். காயம்பட்ட முகத்துடன் எப்படி நடிப்பாய் என்று பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி தாறுமாறாக அடித்தார். 


நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குணமடைய பல நாட்கள் ஆனது. அவனுடைய கொடுமையை என்னால் மன்னிக்க முடியாது. தற்போது நியூயார்க்கில் தலைமறைவாக உள்ளார். இதையெல்லாம் வெளிப்படையாக எழுதுகிறேன்" என இப்பதிவின் மூலம் தெரிவித்துள்ளார் நடிகை அனிகா. இவ்வாறு திரும்பத் திரும்ப காதலன் தனது காதலியை கொடுமைப் படுத்திய சம்பவமானது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement