• May 18 2024

எஸ்.பி.பியின் நினைவிடத்திற்கு திடீரென சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் மோகன்- வைரலாகி வரும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலக இசைப் பயணத்தில் சாதனை படைத்த பாடகர் தான் எஸ்.பி பாலசுப்ரமணியம்சாதனைகள் மேல் சாதனைகள் செய்தாலும் சிறிதும் கர்வம் இன்றி பணிவுடன் நடந்து கொள்வதில் அவரை அடித்துக் கொள்ள யாரும் இல்லை. இவர் கின்னஸ் சாதனை செய்தவர் என்பதோடு பல்வெறு மொழிகளிலும் பாடியுள்ளார்.


பொது மேடையில் எப்பொழுதும் தன்னுடைய குருநாதர் பற்றியும், தனக்கு வாய்ப்பளித்த எம்.எஸ்.வி பற்றியும் தன்னுடன் வளர்ந்த நண்பன் இளையராஜா பற்றியும் எப்பொழுதும் சிலாகித்து பேசுவது எஸ்பிபி வழக்கமாக வைத்திருந்தார். தமிழக ரசிகர்கள் மட்டுமல்ல தெலுங்கு, கன்னட, மலையாள, பாலிவுட் ரசிகர்களும் எஸ்பிபியை மிகவும் நேசித்தனர்.


1960 களின் மத்தியில் எம்ஜிஆருக்காக பாடத் தொடங்கிய எஸ்பிபி 74 வயது வரை பாடிக் கொண்டிருந்தார்.பின்பு கொரொனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இறப்புக்குள்ளானார். இவரது இறப்பு ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.


இந்த நிலையில் இவரின் நினைவிடத்திற்கு பிரபல நடிகரான மோகன் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் தனியாக அமர்ந்து தியானம் செய்தார்.இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement