• Apr 27 2024

இரண்டாம் திருமணம் முடிந்த சில மாதத்தில் மனைவியோடு படம் பார்க்க சென்ற நடிகர் பாலா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கருத்து வேறுபாட்டுக்கு பின்னர்  தன்னுடைய மனைவியுடன் ஒன்றாக சேர்ந்து நடிகர் பாலா படம் பார்த்திருக்கும் தகவல் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தி இருந்தார்.

இதன் பின் சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவு இல்லை. இதனால் இவர் மலையாள மொழிக்கு சென்று விட்டார். மேலும், சிறிய இடைவெளிக்கு பிறகு பாலா அவர்கள் ‘வீரம்’ படத்தில் அஜித் தம்பிகளில் ஒருவராக நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவா தான் இவருடைய அண்ணன்.மேலும் இந்த படத்திற்கு பிறகு பாலா சில படங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை ரொம்ப காலமாக காதலித்து வந்தார்.

இதன் பின்னர் இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அத்தோடு இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் உள்ளார். இவர்களுடைய மணவாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது அம்ருதா தனியாக இசைக்குழு ஆரம்பித்த பின்னர் தான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது என்று சொல்லப்படுகின்றது. சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு அம்ருதா அவருடைய தந்தை வீட்டிற்கு சென்று விடுவாராம்.


இதனால் சில வருடங்களாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. இதன் பின் 2015 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வந்தார்கள். அதனை அடுத்து இருவருக்கும் 2019 ஆம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது. இதன் பின் நடிகர் பாலா அவர்கள் கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை ரகசியமாக கடந்த ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இது குறித்து பாலா முதலில் தெரிவிக்காமல் இருந்தார்.

இதன் பின் பாலா தன் இரண்டாம் மனைவி உடன் எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில்  பகிர்ந்து உறுதி செய்து இருந்தார். மேலும், இவர்களுடைய திருமணம் செய்து முடிந்து ஒரு வருடம் ஆகி இருக்கும் நிலையில் பாலா தன்னுடைய இரண்டாம் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பாடு பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதற்கு அவர், எனக்கும், அவர்களும் நேரம் கொடுங்கள். தேவை இல்லாமல் வதந்திகள் பரப்பாதீர்கள் என்று தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில் இருவரும் சேர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, தற்போது பாலா அவர்கள் மலையாளத்தில் வெளியாகி இருக்கும் சபீக்கிண்டே சந்தோசம் என்ற படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்திருக்கிறார். மூன்று வருட இடைவெளிக்கு பிறகு அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்காக நடிகர் பாலா தன்னுடைய மனைவி எலிசபெத்துடன் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement