• Apr 27 2024

ராஷ்மிகாவிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற ரசிகர்கள்.. அதிர்ச்சியடைந்த நடிகை... வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் ரசிகர்களால் 'நேஷனல் க்ரஷ்' என்று செல்லமாக அழைக்கப்படுபவர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துப் புகழ் பெற்றிருக்கின்றார். 


இந்நிலையில் இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது ஹிந்தியில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும்  இணைந்து நடிக்கிறார். இப்படங்களின் படப்பிடிப்புக்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


அத்தோடு தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இவ்வாறாக பல படங்களிலும் சிறப்பாக நடித்து வருகின்ற ராஷ்மிகா மந்தனா உள்ள ரசிகர்கள் கூட்டமோ ஏராளம். இவரின் நடிப்பினைத் தாண்டி அழகினையும், க்யூட்டான சிரிப்பினையும் பலரும் ரசித்து வருகின்றார்கள்.


அந்தவகையில் இவர் சமீபத்தில் மும்பையில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அங்கு கூட்டத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் பலரும் இவருடன் கைகொடுத்தும் செல்பி எடுக்கவும் முயன்றனர்.


அந்த சந்தர்ப்பத்தில் ரசிகர்கள் சிலர் ராஷ்மிகாவிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றுள்ளார்கள். இதன் காரணமாக ராஷ்மிகா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அப்போது ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாவலர்கள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். அதுமட்டுமல்லாது ரசிகர்கள் சிலர் ராஷ்மிகாவின் கையை பிடித்து இழுத்தும் உடலில் தொட்டுப் பார்த்தும் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து ராஷ்மிகா உடனடியாக பாதுகாவலர்களின் உதவியுடன் காரில் ஏறி சென்றார். ரசிகர்கள் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்ட விதம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement