• May 19 2024

ஹாஸ்பிட்டலுக்கு போன கோதைக்கும் நடேசனுக்கும் காத்திருந்த அதிர்ச்சி- ராகினிக்கு பதிலடி கொடுத்த வசு- Thamizhum Saraswathiyum Serial

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும்.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

ராகினியிடம் கோதை வந்து உன்னை இந்த வீட்டை விட்டு வெளில போகச் சொல்லி யாரும் சொல்லல என்று சொல்ல,ராகினி பரவாயில்லம்மா இங்க இருந்து நாங்க பட்ட கஷ்டம் எல்லாமே போதும் என்கின்றார்.அந்த நேரம் நடேசன் வந்து அந்த ரௌடி கண் முழிச்சிட்டானாம்.நாம் உமனடியாக போய் ஆகவேண்டும் என்று சொல்கின்றார்.


இதனால் உடனே இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பிப் போக பின்னாடியே அர்ஜுனும் கிளம்பிப் போகின்றார். ஹாஸ்பிட்டலில் அந்த ரௌடியிடம் குமாரு எப்பிடி இருக்கிற என்று விசாரிக்கின்றார். அர்ஜுனைப் பார்த்த கோதை அதிர்ச்சியடைகின்றார்.மேலும் அந்த ரௌடி அர்ஜுனின் மாமனரான நடேசனுக்கு பயந்து தான் ஓடினேன். இவர் அர்ஜுனே கத்தியால் குத்தியதாக சொல்லச் சொல்லி மிரட்டினான் என்று மாத்திப் பேசி விடுகின்றான்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே வந்த நடேசனும் கோதையும் எப்பிடி அர்ஜுன் பற்றிய உண்மையை கண்டு பிடிப்பது என்று யோசிக்கின்றனர். மெறுபுறம் சரஸ்வதியை கடையில் சந்தித்த நடேசனின் நண்பன் குழந்தை இல்லை என்று கவலைப் பட வேணாம் ஒரு பரிகாரம் பண்ணினால் போதும் கட்டாயம் குழந்தை பிறக்கும் என்று ஒரு பரிகாரம் பற்றி சொல்கின்றார்.


மேலும் காரில் வீட்டுக்கு போகும் அர்ஜுனும் அவரது மச்சானும் கோதையும் நடேசனும் அவமானப்பட்டு நின்றதை நினைத்து நினைத்து சந்தோஷப்படுகின்றனர். பின்னர் வீட்டுக்கு வந்ததும் கார்த்திக் அர்ஜுனை எங்கடா போனாய் என்று விசாரிக்க ராகினி கார்த்திக்கை திட்டுகின்றார். அப்போது வசு உன் புருஷனை யாரும் எதுவும் சொல்லக் கூடாது என்றால் வீட்டுக்குள் பூட்டி வை என்று சொல்கிறார்.


அந்த நேரம் கோதையும் நடேசனும் வர ராகினி என்ன உண்மையை கண்டு பிடிக்கப் போறேன் என்று போனீங்க கண்டுபிடிச்சீங்களா என்று கேட்க அர்ஜுன் நக்கலாகப் பேச கோதை விசச் செடியை தெரியாமல் வளர்த்திட்டோம். அது பற்றிய உண்மை சீக்கிரம் வெளில வரும் என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement