• May 18 2024

கார் ஓட்டிட்டு போன பாக்கியாவுக்கு வந்த புதிய பிரச்சினை- கோபியை திட்டித் தீர்த்த ராதிகா- பொய் சொன்ன செழியன்- Baakiyalakshmi Serial

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா செழியனுக்கு போன் பண்ண செழியன் போனை கட் பண்ணுகின்றார். கொஞ்ச நேரம் கழித்து பேசலாம் என்று மாலினியிடம் சொல்கின்றார். தொடர்ந்து கிச்சனுக்கு ராமமூர்த்தி வர அங்கே அமிர்தாவும் எழிலும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கின்றார்கள். இதனால் ராம மூர்த்தி அந்த இடத்தில இருந்து கிளம்ப பாக்கியா போன் பண்ணுகின்றார்.


மேலும் பாக்கியா, ட்ரைவர் திடீரென இடையில் விட்டிட்டு போன விஷயத்தைச் சொல்ல எழில் தான் இன்னொரு ட்ரைவரை அனுப்பி விடுவதாக சொல்ல, அதெல்லாம் தேவையில்லடா காரை நானே ஓட்டிட்டு வந்திட்டேன் என்று சொல்ல அமிர்தாவும் ராமமூர்த்தியும் ஆச்சரியப்படுகின்றனர். தொடர்ந்து வீட்டில் எல்லோரும் இருக்கிறாங்களா என்று கேட்க செழியன் இன்னும் வரல என்று சொல்கின்றனர்.

பின்னர் பாக்கியா செழியனுக்கு போன் பண்ணி சீக்கிரமா வீட்டுக்குப் போ என்று சொல்ல, செழியன் தான் வீட்டில் தான் இருப்பதாக சொல்லி ஏமாற்றுகின்றார். பாக்கியா எதற்காக செழியன் பொய் சொல்கின்றான் என்று யோசிக்கின்றார்.


தொடர்ந்து அமிர்தா ஏதோ யோசனையில் இருக்க எழில் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் என்று கேட்க அமிர்தா ஒன்றும் இல்லை என்கின்றார். இதனால் எழில் அவருடைய மாமனார் மாமியிடம் போன் பண்ணி பேச அமிர்தாவின் முதல் கணவரின் நினைவு நாள் என்று மாமனார்  சொல்கின்றார். இதைக் கேட்ட எழில் அவர்களை ஆறுதல்ப்படுத்துகின்றார். அமிர்தாவையும் சமாதானப்படுத்துகின்றார். பின்னர் பங்சன் முடிந்ததும் கோபி இனியாவுக்கு போன் பண்ணி பேசுகின்றார்.

அப்போது இனியா ரூமுக்கு போய்ட்டு இருக்கிறோம் என்று சொல்ல, இனிதான் ரூமையே தேடிக் கண்டு பிடிக்கப் போகின்றீங்களா என்று சொல்ல, பாக்கியா அதெல்லாம் எழில் எப்பவோ புக் பண்ணிட்டான் நீங்க கவலைப்படாமல் வாங்க என்று சொல்ல, போனில் பாக்கியா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கோபியும் அமைதியாகின்றார்.


கோபி போன் பேசுவதைப் பார்த்த ராதிகா, எதுக்கு எப்ப பார்த்தாலும் அவங்களுக்கு போன் பண்ணி பேசிட்டே இருக்கிறீங்க. உங்களுக்கு வேற வேலை இல்லையா என்று திட்டுகின்றார்.பின்னர் பாக்கியாவிடம் இனியா ரூமுக்கு போ இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்கும் போது பாக்கியா இன்னும் 5 நிமிஷத்தில போய்டலாம் என்று சொல்கின்றார்.அந்த நேரம் கார் திடீரென நின்று விட எல்லோரும் இறங்கி என்ன என்று பார்க்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

தொடர்ந்து வெளியாகிய ப்ரோமோவில் பாக்கியா எல்லோரும் காரை விட்டு இறங்கி நிங்க யாரோ ஒருவர் பைக்கில் வந்து இவர்கள் முன்னால் நிற்க இவர்கள் அதிர்ச்சியடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement