• Apr 27 2024

உடல் நிலை சரி இல்லாத போதும் சமந்தா செய்த நல்ல காரியம் - குவியும் பாராட்டுக்கள்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சமந்தா ருத் பிரபு இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார். மேலும் இவர் நடிப்பில் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது.


மேலும் இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை இவர் பெற்றுக் கொண்டார்.


இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம், தூக்குடு, சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு, கத்தி  போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். மேலும் இவரது அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றன.


இந்நிலையில் சமந்தா நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் "யசோதா". மேலும் இப்படம் வெளியான உடனே சமந்தா அனாதை இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு உணவு தானம் செய்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ...


Advertisement

Advertisement

Advertisement