தமிழில் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித்.இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் துணிவு.
இவ்வாறு இருக்கையில் அஜித் ரசிகர் ஒருவர், விரைவில் வெளியாக உள்ள துணிவு படத்தின் அப்டேட் கேட்டு கையில் பிளேடால் எழுதி செல்போனில் படம் எடுத்து அதனை அஜித் ரசிகர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பியுள்ளார். எனினும் அந்த புகைபடம் தற்போது வைரலாகி வருகிறது.
சமீப காலங்களில் பல்வேறு திரைப்பட நடிகர்களுக்கு அவர்களது ரசிகர்கள் பல வகையில் வித்தியாசமாக பிறந்த நாள் வாழ்த்து, புதிய திரைப்படம் ரிலீஸ் போன்றவற்றுக்கு பல்வேறு வகையில் வரவேற்பு கொடுத்தும், வித்தியாசமாக செய்து வருகின்றனர்.
அந்த வகையில் புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் துணிவு படத்தின் அப்டேட் கேட்டு தனது கையில் பிளேடால் எழுதி அதனை தொலைபேசியில் படம்பிடித்து பிரஞ்ச் சிட்டி அஜித் ஃபேன்ஸ் என்ற whatsapp குழுவில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அத்தோடு கட்அவுட்டிற்கு பால் ஊற்றுவது, காவடி எடுப்பது இதுபோன்ற செயல்களை நடிகர் அஜித் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. ஏற்கனவே தனக்கென இருந்த ரசிகர் மன்றத்தையும் நடிகர் அஜித் கலைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Listen News!