• May 18 2024

நடன நிகழ்ச்சியில் கூட்டத்திற்குள் சிக்கிக் கொண்ட பிரபல நடிகை- தீவிரமாக அடி தடி நடத்திய போலீசார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

 பிரபல போஜ்புரி நடிகையாக இருப்பவர் தான் அக்‌ஷரா சிங். இவர் சமீபத்தில்  கர்வாவில் நடந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் உரைக்குப் பிறகு நடன நிகழ்ச்சிக்காக அவர் அங்கு வந்திருந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த போஜ்புரி நடிகையிடம் சிலர் தவறாக நடந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


கூட்டமாக அவரை திணறடித்தனர். இதனால் அவர் கூட்டத்திற்குள் சிக்கி கொண்டார். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பலர் காயம் அடைந்தனர். 


இந்த சம்பவத்தால் கோபமடைந்த அக்‌ஷரா சிங் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement