• Apr 30 2024

என்னோட தப்பான போட்டோவை எல்லாருக்கும் அனுப்புறாங்க... கதறிக் கண்ணீர் வடிக்கும் 40 வயதான பிரபல நடிகை...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இவர் சீரியலில் அம்மா அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர். சமீபகாலமாக சீரியல் நடிகைகள் வயது வித்தியாசமில்லாமல் சினிமா ஹீரோ என்ற ரேஞ்சுக்கு கவர்ச்சியில் அதகளம் செய்து வருகின்றனர்.


அதனை சமூக வலைத்தளங்களின் வாயிலாக தொடர்ச்சியாக பார்த்து வருகின்றோம். அந்த வகையில் 'சரவணன் மீனாட்சி' என்ற சீரியலில் அம்மா கதாபாத்திரம் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருப்பவர் தான் நடிகை லட்சுமி வாசுதேவன்.

இவர் தற்போது விஜய் டிவி மட்டுமில்லாமல் பல தொலைகாட்சி சேனல்களிலும் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் முழுக்க முழுக்க இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வரும் இவர் இணையத்தில் தாராளம் காட்டி வருவதாக ஏற்கெனவே ரசிகர்கள் பலரும் கலாய்த்து இருந்தார்கள்.


தற்போது 40 வயதாகும் லட்சுமி வாசுதேவன் 20 வயது நடிகைகள் போல சீரியல் மட்டுமில்லாமல் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இணையத்தில் கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் கூறிய விடயமானது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது தன்னைப் பற்றிய தப்பான புகைப்படங்கள் பரவுவதாக கூறி அழுத வண்ணம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார்.


அதாவது "என்னைப் பற்றி யாரோ ஒருவர் தப்பான விதத்தில் போட்டோகிராப் செய்து வேறு ஒரு புது நம்பரிலிருந்து என் வாட்ஸ்அப் இல் உள்ள எல்லாருக்குமே அனுப்பிட்டு இருக்காங்க. தயவு செய்து நான் செய்த பிழையை நீங்க யாரும் செய்யாதீங்க" எனக் கூறியிருக்கிறார்.

மேலும் "லக்கி பிரைஸ் விழுந்திருக்கு என்று எனக்கு ஒரு மெசேஜ் வந்து இருந்திச்சு, அந்த மெசேஜ் ஐ நானும் கிளிக் பண்ணினேன். உடனே ஒரு அப் டவுன்லோடு ஆகி என் போன் ஹக் ஆகிடுச்சு. அது மூலமாக என் போட்டோவை எடுத்து தப்பாக எடிட் பண்ணி எல்லாருக்கும் அனுப்பிட்டு இருக்காங்க.

நான் 5000 ரூபா லோன் வாங்கினதாகவும் அதைக் கட்டல என்றால் இப்படிப் பண்ணுவோம் என்று சொல்லி மிரட்டிற்று இருக்காங்க. அந்த தப்பான போட்டோ என் அம்மா, அப்பா, நண்பர்கள் எல்லாருக்குமே போய் இருக்கு" எனவும் கண்ணீருடன் கூறியிருக்கின்றார் .


அத்தோடு "நான் இது பற்றி தற்போது சைபர் கிரைம்ஸ் இல் கம்பிளைன் பண்ணி இருக்கேன். அவங்க தேடிட்டு தான் இருக்குக்காங்க. தயவு செய்து நான் விட்ட பிழையை யாரும் பண்ணிடாதீங்க.

எந்த ஒரு புது நம்பரில் இருந்து மெசேஜ் வந்தாலும் அதை ஓபன் பண்ணி லிங்க் ஐ கிளிக் பண்ணிடாதீங்க" எனவும் கண் கலங்கியவாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றார் நடிகை லட்சுமி வாசுதேவன். 

Advertisement

Advertisement

Advertisement