• May 08 2024

26வயது வாலிபரை மிரட்டி ஆபாசமாக நடிக்க வைத்த பெண் இயக்குநர்.. போலீசார் எடுத்த அதிரடி முடிவு.. பரபரப்பில் திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமா இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லட்சுமி தீப்தா. இவர் 'நான்ஸி, ஸெலின்றெ டியூசன் கிளாஸ், பால் பாயாசம் போன்ற 18+ வெப் சீரிஸ்களை இயக்கி உள்ளார். இவை அனைத்துமே அந்தரங்கம், படுக்கையறை காட்சிகள் அதிகம் நிறைந்தவையாக உள்ளன.


இந்த வெப் சீரிஸ்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியானது முதல் ஆபாச தொடர்கள் என சர்ச்சையில் சிக்கி உள்ளன. இதில் 'பால்பாயாசம்' என்ற தொடரில் நாயகியாக கதீஜா ஷெரீப் நடித்து இருந்தார்.

இது குறித்து அவர் பல உணமைகளைக் கூறி இருக்கின்றார். அதாவது "எனக்கு அவை ஆபாச தொடர்கள் என தெரியவில்லை. படம் வெளியான பிறகுதான் படம் 18+ என்று தெரிந்தது. என்னால் மலப்புரத்தில் உள்ள வீட்டில் தங்க முடியவில்லை"என கூறி உள்ளார். 

மேலும் "லக்ஷ்மி தீப்தா இந்த படங்களில் அனைவரையும் ஏமாற்றி நடிக்க வைத்ததாகவும் தொடரில் அக்கா, தம்பி, மாமா, பாட்டி என நடித்தவர்கள் சாதாரண சீரியல் என்பதால் நடித்ததாகவும், ஆனால் படம் வெளியான பிறகுதான் அடல்ட் சீரிஸ் என்று தெரிய வந்ததாகவும்" அவர் கூறி உள்ளனர். 


இதனைத் தொடர்ந்து ஏற்கனவே லக்ஷ்மி தீப்தா மீது ஒரு பெண் கட்டாயபடுத்தி ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்தியதாகவும், வேண்டாம் என்று கூறியும் தனது அந்தரங்க காட்சிகளை வெளியிட்டதாகவும் போலீசில் புகார் ஒன்றினை அளித்தார். அத்தோடு போலி ஆவணம் தயாரித்து ஆபாச படத்தில் நடித்ததாக அந்த பெண் அப்புகாரின் மூலம் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது ஆபாசமான படம் என்ற போர்வையில்  லக்ஷ்மி தீப்தா விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். 


இந்த் நிலையில் வெங்கனூரை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர், லக்ஷ்மி தீப்தா படத்தில் நடிக்க வைப்பதாக கூறி ஆபாச சீரியலில் நடிக்க வைத்ததாக போலீசில் புகார் அளித்திருக்கின்றார். இதன் காரணமாக ஆபாச வெப் சீரிஸில் நடிக்க இளைஞரை மிரட்டியதாக, டைரக்டர் லட்சுமி தீப்தாவை அருவிக்கரை போலீசார் நேற்று கைது செய்தனர். 

பின்பு அவர் நெடுமங்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அன்றைய தினமே அவருக்கு பல நிபந்தனைகளின் கீழ் ஜாமீன் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது ஆறு வாரங்களுக்கு ஒவ்வொரு புதன் மற்றும் வியாழன் தோறும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறும் கூறப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் 26வயது வாலிபரை மிரட்டி ஆபாச படத்தில் ஒரு பெண் இயக்குநர் நடிக்க வைத்திருக்கின்ற இந்த சம்பவமானது திரையுலகிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement