• Apr 28 2024

ஐன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 20 வயது இளம் நடிகை- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கேளராவின் காசர்கோடு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தான் பிரபல நடிகை சஹானா. மலையாள சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முக்கிய நடிகையாக வலம் வரும் இவர் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இருபது வயதான இவர் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்து அதிகம் பாப்புலர் ஆனார். இவருக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் கணவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு ஜன்னல் கிரில்லில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.போலீசார் நடிகையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சஹானாவின் கணவர் சஜாத் தொடர்ந்து பணம் கேட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் வரக்கூடாது, போனில் கூட பேசக்கூடாது என்கிற நிலையில் தான் சஹானாவை அவர் வைத்திருந்தார் என் சஹானாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருக்கின்றனர்.

அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என பெற்றோர் புகார் அளித்து இருப்பதால் தற்போது போலீஸ் சஜாத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement