தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நுழைந்தவர் வனிதா. 'மாணிக்கம், சந்திரலேகா' போன்ற படங்களில் நடித்துள்ள வனிதா அதன்பின் தன்னுடய சொந்த வாழ்க்கை காரணமாக சினிமா பக்கம் வரவில்லை.
அதனைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனத்தை பெற்றார். அந்நிகழ்ச்சிக்கு பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.
அதுமட்டுமல்லாது இப்போது ஆடை, அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை கவனித்து வருகிறார். இதுதவிர மற்ற பிரபலங்களை போல சொந்தமாக யூடியூப் பக்கமும் வைத்துள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய கடைக்கு தானே மாடலாக மாறி இருக்கின்றார். அந்தவகையில் தற்போதும் மாடர்ன் உடையணிந்து போஸ் கொடுத்து அதனைப் புகைப்படமாக எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி இருக்கின்றார்.
அதில் இவர் தன்னுடைய கால், மற்றும் கையில் உள்ள டாட்டூ தெரியும் வகையில் காணப்படுகின்றார். இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் "பெண்புலி" என வர்ணித்திருக்கின்றார். இப்புகைப்படங்களானவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!