• May 18 2024

இறந்த மாணவி ஸ்ரீமதிக்கு விஜய்யை பற்றி சொன்னால் கோபம் வருமாம்... காரணம் என்ன... தாயாரின் மனதை உருக்கும் பதில்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவில் கள்ளக்குறிச்சிப் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த ஸ்ரீமதி என்கிற மாணவி, கடந்த மாதம் 13-ஆம் திகதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தமிழகத்தில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இறந்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு அந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர்.


இவர்களின் இந்த போராட்டம் ஆனது ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. அந்தவகையில் பள்ளியினுள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகளை தீயிட்டு கொளுத்தியதோடு மட்டுமல்லாமல் பள்ளியையும் சேதமாக்கினர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி முதல்வர் உள்பட 6 பேரை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.


சம்பவம் நடந்த நாள் முதல் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்த அவர்களுக்கு சமீபத்தில் தான் ஜாமீன் வழங்கப்பட்டது. இவ்வாறு பரபரப்பாக இந்த வழக்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஸ்ரீமதியின் தாயார் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கூறிய விடயம் ஆனது தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அதில் தனது மகளுக்கு பிடித்த நடிகர் குறித்தும், அவர் என்னென்ன விரும்பி பார்ப்பார் என்பது குறித்தும் கூறியுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், "ஸ்ரீமதி, நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாம். அவருக்கு விஜய் என்றால் அவ்வளவு தூரம் பிடிக்கும் என்றும், வீட்டில் விஜய் பாட்டை போட்டு அடிக்கடி நடனம் ஆடிக்கொண்டிருப்பார்" என்றும் தெரிவித்திருக்கின்றார். மேலும் 'விஜய்யை நம்ம ஏதாச்சும் சொல்லிவிட்டால் அவளுக்கு ரொம்ப கோபம் வரும்" என்றும் கூறி உள்ளார். 

ஸ்ரீமதியின் தாயார் அளித்த இந்த பேட்டி ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதுமட்டுமல்லாது விஜய் ரசிகர்களும் இவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement