• Apr 27 2024

வனிதா தான் ரொபேர்ட்டை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தாரா... இதோ அவரே கூறிய பல திடுக்கிடும் உண்மைகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டிருப்பவர் ரொபேர்ட் மாஸ்டர். இவர் வனிதாவின் முன்னாள் காதலன், மற்றும் கணவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் இருவரும் தற்போது பிரிந்து விட்டார்கள். அந்தவகையில் தற்போது தான் தான் அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தேன் எனக் கூறி வனிதா பேட்டி ஒன்றினை அளித்திருக்கின்றார்.


அதாவது அப்பேட்டியில் கவர்ச்சி நடிகையான ஷகிலா "பிக்பாஸ் வீட்டுக்குள்ள ரொபேர்ட் மாஸ்டரும், ரச்சிதாவும் பண்ணுறதைப் பார்க்க உனக்கு பொறாமையாக இல்லையா" எனக் கேட்கின்றார். அதற்கு உடனே வனிதா "சொந்தக் காசில சூனியம் வைச்ச என்று சொல்லுவாங்க தானே அதை தான் நான் பண்ணியிருக்கேன்" என்றார்.

மேலும் "ரொபேர்ட்டை நம்பி உள்ள அனுப்பி வைச்சதும் நான் தான்" எனக் கூறி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது "நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருந்த நேரத்தில் அவன் யாரையோ கல்யாணம் பண்ணி இருக்கான், அந்தப் பொண்ணு ஒரு குழந்தை மாதிரி" எனக் கூறியிருந்தார்.

அத்தோடு "எனக்கும் வனிதாக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, நாங்க லவ் பண்ணவே இல்லை, டாட்டூ கூட நான் பப்ளிசிட்டிக்காக தான் போட்டேன் என்று ஒரு சில தகாத வார்த்தைகளைக் கூட ரொபேர்ட் கூறியதாக நான் கேள்விப் பட்டிருந்தேன்" எனவும் தெரிவித்திருந்தார் வனிதா.


அதுமட்டுமல்லாது பல வருடங்களின் பின்னர் ரொபேர்ட் ஒரு படத்திற்காக தன்னுடன் வந்து பேசி இருந்ததாகவும் கூறி இருக்கின்றார். அந்த நேரத்தில அவன் எங்களுக்குள்ள எதுவுமே நடக்காத மாதிரி தான் என்னிடம் பேசினான்.

அப்போதுதான் விஜய் டிவியில் பிக்பாஸ் நடக்குது எல்லாரும் என்னை போக சொல்லுறாங்க நீ அதைப்பற்றி என்ன நினைக்கிறாய் என அவன் என்னிடம் கேட்டான். அதுக்கு நானும் நீ போனால் உனக்கு ஒரு போப்பிலாரிட்டி கிடைக்கும் போ என்று சொன்னேன். அப்போ அவனுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கல. அதனால நீ கொஞ்சம் பேச முடியுமா என்று என்னிடம் கேட்டான். 

நான் அதுக்கு உன்னை யாருமே இதுவரைக்கும் கேட்கலையா என்று கேட்டேன், அவனும் இல்லை என்றான். அதுக்கு பிறகு நான் தான் விஜய் டிவியிடம் நேரடியாகப் பேசி, பிரதீப்பிட்ட சொல்லி நான் தான் அவனை உள்ள அனுப்பி வைச்சேன். 

அவனும் பதிலுக்கு சொன்னான் நான் நிரூப் மாதிரி நான் வனிதாவினால் தான் இங்க நிக்கிறன் என்று எல்லாம் சொல்லுவான் என்று சொன்னான், நானும் நம்பி சம்பளம் வரைக்கு சொல்லிக் குடுத்து அவனை அனுப்பி வைச்சேன்" எனக் கூறி இருக்கின்றார் வனிதா.

அதுமட்டுமல்லாது அவன் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சொன்னான் "நான் எதுக்கு உன்னைப் பற்றிப் பேசணும், நான் என்னைப் பற்றிப் பேசத்தான் போறேன்" என்றான்.

அதுக்குப் பிறகு கூடி நான் சொல்லி அனுப்பினேன் "லவ் எல்லாம் பண்ணதை, யாரும் உன்னை லவ் பண்ணுறதாக சொன்னால் கூடி அவங்களுக்கு அட்வைஸ் பண்ணு என்று சொல்லி  அனுப்பினேன், ஆனால் அவன் இப்ப போய்ற்று  லவ் பண்ணிற்று இருக்கான், வெளிய ஒரு பொண்ணு இருக்கு அது கூட அவனுக்குத் தெரியலயா" எனவும் கூறி இருக்கின்றார் வனிதா.

இவர் இவ்வாறு கூறியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement