• May 18 2024

ரசிகர்களுக்கு கை கொடுத்து விட்டு டெட்டால் போட்டு கழுவிய விஜய்... எவ்வளவு நாளைக்கு நீங்க தமிழ் நாட்டை ஏமாத்துவீங்க... உண்மையை உடைத்த நபர்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் ரசிகர்களால் 'தளபதி' எனச் சிறப்பாக போற்றப்பட்டு வருகின்றார். லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய்க்கு தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் ஏராளமான ரசிகர் மன்றங்கள் உண்டு.


'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் நடிப்பில் கிட்டத்தட்ட 65 இற்கு மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. அத்தோடு தற்போது 'வாரிசு' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் 'தளபதி 67' கை கோர்க்க இருக்கின்றார்.

இந்நிலையில் ரசிகர்களுக்காக அறிவுரை கூறி பல மேடைகளில் பேசி வரும் நடிகர் விஜய்யை பற்றி ஒரு நபர் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதாவது "ரசிகர்களுக்கு கை கொடுத்து விட்டு அவர்களோடு இணைந்து போட்டோவும் எடுத்துக் கொண்டு  விஜய் கேரவனுக்கு சென்று டெட்டாய்ல் போட்டு கைக்கழுவுவார். அதை நானே என் கண்ணால் பார்த்திருக்கிறேன்" எனக் கூறியிருக்கின்றார் அந்த நபர்.

மேலும் "சம்பளத்தை பிளாக் மணியாக வாங்கும் நீங்கள் ஏன் மேடையில் கருத்து கூறுகிறீர்கள். அப்படி பேசுவதை விட்டுவிட்டு படத்தில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களை விட பெரிய ஆட்கள் எல்லாம் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்" எனக் கூறியிருக்கின்றார்.


இந்த வீடியோ ஆனது சில வருடங்களுக்கு முன் வெளியாகினாலும் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement