• May 18 2024

தல என சொன்னதும் ஆரவாரம் செய்த ரசிகர்கள்-கோபத்தில் திட்டிய விஜய் சேதுபதி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி.இதனைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.இப்படங்களின் மூலம் சிறந்த நடிகராக அறியப்பட்டார்.

கிராமத்துக் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்திய விஜய் சேதுபதி, 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து றெக்க படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அறியப்பட்டார்.

எதார்த்தமாக நடித்து தனக்கென ஒரு தகுதியையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ள இவர் தற்பொழுது கதாநாயகனாக மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் வில்வன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.

எந்த விதமான சினிமா பின்னணியும் இல்லாமல் நடிகராக வந்து தற்போது ஒரு முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார். அவரது நடிப்பு மட்டுமின்றி அவரது மேடை பேச்சுகளுக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர் தொடர்ந்து மேடையில் பேசக்கூடியவர். மேலும் அப்படி அவர் இன்று சென்னை லயோலா கல்லூரியில் ஒரு விழாவில் பேசினார்.

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" என திருக்குறளை சொல்லி அது பற்றி பேசி கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. அப்போது தல என்றதும் மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.

"தேவையில்லாம கத்தாதீங்க. என்ன பேசிட்டு இருக்கோம். என்னா நீங்க" என கோபமாக கூறினார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலகி வருகிறது.  


Advertisement

Advertisement