• Oct 08 2024

விடுதலை படத்திற்காக வெற்றிமாறன் கடுமையாக உழைச்சிருக்காரு சூரி கண்ணுக்குள்ளையே இருக்கிறாரு- புகழாரம் சூட்டிய சீமான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும்,  ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக்  கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.


இந்த விடுதலை படத்தினை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய இயக்குநர் சீமான், "இந்த படத்தை தயவுசெய்து பாருங்கள். சூரி உங்கள் கண்ணை விட்டு போக மாட்டார். இந்த படத்திற்கு கடுமையான உழைப்பு வெற்றிமாறன் உடையது.  இது வரலாற்றில் பெரும் படைப்பு. இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்தது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் & இசைஞானி இளையராஜா. 


நடிகர் சூரியின் நடிப்பில் முன்னர் இருந்த நகைச்சுவை நடிகரை பார்க்க முடியாது. படம் பார்த்த பிறகு எதுவும் பேச முடியாது. அசுரன் படம் பார்த்த பிறகு இருந்த தாக்கம் இந்த படத்தில் 10-20 அசுரன் படத்தின் தாக்கம் உண்டு. விடுதலை இரண்டாம் பாகம் வரும் போது மிகப்பெரிய படைப்பாக இருக்கும்." என சீமான் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement