• Jul 27 2024

முதலில் 2ஆம் பாகம், அடுத்த வருடம் முதல் பாகம்.. ‘கைதி’ பாணியில் தயாராகும் ‘வீர தீர சூரன்’..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

விக்ரம் நடித்த இருக்கும் ‘வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் நேற்று வெளியான 2 நிமிடத்திற்கு மேலான வீடியோ இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று வெளியான ‘வீர தீர சூரன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரண்டாம் பாகம் என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து முதல் பாகம் என்ன ஆச்சு என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அருண்குமார் அளித்த பேட்டியில் ’இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட உள்ளோம் என்றும் அதன் பிறகு அடுத்த வருடம் இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று வரிசையாக தான் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் முதலில் இரண்டாம் பாகம் அதன் பிறகு அதற்கு முதல் பாகம் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இது திரையுலகில் புதிது அல்ல.



கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’கைதி’ திரைப்படமே அந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் என்றும் முதல் பாகம் விரைவில் உருவாக்கப்பட இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’காந்தாரா’ படமும் இரண்டாம் பாகம் தான் என்றும் தற்போது தயாராகி வருவது தான் முதல் பாகம் என்றும் ரிஷப் ஷெட்டி ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல்தான் தற்போது ‘வீர தீர சூரன்’ படமும் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாகவும் இதனை அடுத்து தான் முதல் பாகம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement