• Apr 27 2024

வீட்டில் தனிமையில் வச்சு சித்திரவதை செய்தார்- கணவரை விவாகரத்து செய்ததற்கு இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் வி .ஜே மகேஸ்வரி. இவர் சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் சிறந்த என்டர்டைனராக இருந்து வந்தார்.இதனைத் தொடர்ந்து பல சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

திருமணத்திற்கு பிறகு மீடியாவை விட்டு ஒதுங்கி இருந்த வி ஜே மகேஸ்வரி தான் சந்தித்த இன்னல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். தன் கணவர் வீட்டில் தன்னை மிகவும் அடிமைப்படுத்தியதாகவும், நண்பர்களுடன் பழக கூடாது பிரண்ட்ஷிப்பை பிரித்ததாகவும், எந்த ஆண்களுடனும் நடிக்க கூடாது,சீரியல்களில் நடிப்பதை ரீதியாதாகவும், அதனால் வெறும் விஜேவாக மட்டும் தான் இருந்தேன் என்று கூறியுள்ளார்.

அப்படி மீறி சீரியல்களில் நடித்தால் குடும்பத்து மானம் போய்விடும் என்று கட்டுப்பாடு விதித்ததுடன், பல பிரச்சனைகளையும் கொடுத்தனர்.இப்படி கட்டுப்பாடுகள் பல போட்டதால், பினான்சியல் ஆக தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் கூறியுள்ளார் வி ஜே மகேஸ்வரி. தன் அம்மாவிற்கு இவர் செய்யும் சிறு உதவிகள் கூட செய்யக்கூடாது என்று கூறிவிட்டதாக கூறியுள்ள இவர், பல கொடுமைகளையும் அனுபவித்ததாகவும், தன்னை சந்தேகப்பட்டதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

தன் அம்மாவின் செலவிற்கு காசு கொடுத்து வந்த வி ஜே மகேஸ்வரியை, தடுத்து இனி காசு கொடுக்கக் கூடாது என்று கூறி விட்டதாகவும், இதனால் தன் அம்மா வீட்டு வேலைக்கு செல்ல முடிவு எடுத்ததாகவும் கூறியுள்ளார். இத்தனை வருடங்கள் என்னை கஷ்டப்பட்டு வளர்த்த என் அம்மாவை நான் எப்படி வீடு வேலைக்கு அனுப்ப முடியும், இதுவே அவர்கள் அப்படி செய்ய விட்டுவிடுவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பிரச்சனைகளில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள விவாகரத்து முடிவை எடுத்ததாக கூறியுள்ளார் மகேஸ்வரி. விவாகரத்துக்கு பிறகு தான் நிம்மதியாக இருப்பதாகவும், விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்கியதையும், பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement