• May 08 2024

புடவையை கட்டி..உடம்பில் சூடான மெழுகு பூசி..பிக் பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த கொடுமை..அவரே கொடுத்த பேட்டி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உலகலாவிய ரீதியில் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்தியில் தான் ஒளிபரப்பினைத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 6வது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. அதே போல இந்தியில் 15 சீசன்கள் முடிந்து 16 வது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது.


இந்நிலையில்,இந்தி பிக் பாஸ் இந்தி சீசன்3ல் கலந்து கொண்ட ஆடை வடிவமைப்பாளரான ரோஹித் வர்மா, தன் வாழ்க்கையில் நடந்த அவலங்களை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.மேலும் அதில், என் குடும்பம் மிகவும் பிற்போக்கு எண்ணத்தைக்கொண்ட குடும்பம் தான். ஆனால், அப்பா,அம்மா என அனைவரும் நல்லவர்கள்.



அத்தோடு நான் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும், என் சொந்த மாமாவால், எட்டு வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். எனக்கு புடவையை கட்டி, என் உடம்பில் சூடான மெழுகு பூசி, மேலும் கொடூரமான அத்துமீறல்களை அவர் செய்து உள்ளார். மேலும் இந்த கொடுமை மூன்று நான்கு வருடங்களான எனக்கு நடந்தது. இது பற்றி பெற்றோரிடம் சொல்ல பயந்தேன்.



 தாஜ் ஹோட்டலுக்கு வெளியே பாலியல் தொழிலாளியாக வேலை செய்தேன், அந்த நேரத்தில் தனக்கு பணம் தேவைப்பட்டது. இங்கிருந்து கிடைத்த பணத்தை வைத்து நான் டிசைனிங் பொருட்களை வாங்கினேன். நான் இதை செய்ய விரும்பியதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.



இதனைத் தொடர்ந்து,பேசிய ரோஷித் வர்மா, நான் ஒரு நடிகருடன் உறவில் இருந்தேன். அவருடன் ஒன்றாக சில வருடங்கள் வாழ்த்தேன். ஆனால் அவருக்கு வேலை கிடைத்து அதிகமாக சம்பளம் கிடைத்தது என்னை மறந்துவிட்டார். தற்போது நான் ஆடை வடிவமைப்பாளராகவும் மற்றும் மும்பையில் தனது ஸ்டுடியோவை வைத்திருக்கிறேன் என்று தனது வாழ்க்கையில் நடந்த சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement