• May 18 2024

கர்ப்பத்தை வீட்டில் சொல்லத் தயங்கும் மூர்த்தி.. கோபத்தில் பயங்கரமாக கொந்தளித்த தனம்.. இன்றைய எபிசோட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இந்த சீரியலில் எப்போதுமே அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் இந்த சீரியலில் முல்லை, ஐஸ்வர்யா இருவருமே கர்ப்பமாக இருக்கும் நிலையில் திடீரென தனமும் கர்ப்பம் அடைகிறாள். ஆனால் இதை வீட்டில் யாருக்கும் சொல்லாமல் மூர்த்தியிடம் மட்டுமே முதலில் சொல்கிறாள். 


அதுமட்டுமல்லாது இந்த நேரத்துல எப்படி இதை வீட்ல சொல்ல முடியும். நீங்கதான் இந்த விஷயத்தை வீட்ல சொல்லணும் என மூர்த்தியிடம் கூறிவிடுகிறாள் தனம். அதன்பின்னர் ஹாஸ்பிட்டல் போய்விட்டு அவள் வீட்டுக்கு வந்ததும் எங்க அக்கா போனீங்க என தனத்திடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள் மீனா. மேலும் எப்பவும் வெளியே போனா எங்ககிட்ட சொல்லிட்டு போவீங்க. இப்ப எங்க போயிட்டு வந்தீங்க என விடாமல் துருவித் துருவி கேட்கிறாள். 

இதனையடுத்து கடைக்கு போயிட்டு வந்ததாக அவர்களிடம் சொல்லி சமாளிக்கிறாள் தனம். ஆனாலும் மீனா விடாமல் முல்லை, ஐஸ்வர்யாவிடம் ஒருவேளை அக்காவும் மாமாவும் வெளிய போய் ரொமான்ஸ் செஞ்சுட்டு வர்றாங்களோ என கேட்கிறாள். இதனால் தனம் இவக்கிட்ட இருந்து எப்படி தப்பிப்பது என தெரியாமல் சற்றுக் குழம்புகிறாள். 


அதன்பின்னர் இரவு நேரத்தில் அனைவரும் வீட்டுக்கு வந்துவிட, தனம் இப்பவே எல்லார்க்கிட்டயும் சொல்லுங்க என மூர்த்தியிடம் அடம்பிடித்துக் கூறுகிறாள். அவனும் சரியென கூற தம்பிகள் முல்லை, மீனா, ஐஸ்வர்யாவை கூப்பிட்டுவிட்டு தனம் உள்ளே சென்றுவிடுகிறாள். பின்பு மூர்த்தி எப்படி சொல்வது என தெரியாமல் திணறுகிறான். 

ஒருவாறு சமாளித்துக் கொண்டு யாரோ ஒருவர் பேரை சொல்லி இந்த பெரியப்பாவா தெரியுமா? இவருக்கு இப்போ 60 வயசு என சொல்கிறான். உடனே தம்பிகள் இப்படி ஒருத்தர் நமக்கு பெரியப்பாவா? இப்போ எதுக்குன்னே அவரை பற்றி பேசுறீங்க என அவரிடம் கேட்கின்றனர். உடனே மூர்த்தி, அவரோட பையனுக்கு இப்போ பதினெட்டு வயசு. எவ்வளவு லேட்டா குழந்தை பெத்து இருக்காரு பாரு என சொல்கிறான்.


இதற்கு உடனே மீனா, இவ்வளவு லேட்டா குழந்தை பெத்துக்கிறது எல்லாம் அவ்வளவிற்கு நல்லது இல்லை மாமா. குழந்தைக்கு இருபது வயசு ஆகுறதுகுள்ள இறந்துடுவாங்க என சொல்ல உடனே ஷாக்காகிறான் மூர்த்தி. அதுமட்டுமல்லாது ஐஸ்வர்யாவும் இப்பலாம் யாரு மாமா லேட்டா குழந்தை பெத்துக்குறாங்க எனக் கூறுகிறாள். 

அதன்பின்னர் மூர்த்தியும் சொல்ல வந்ததை விட்டுவிட்டு சரி சரி டைம் ஆச்சு. எல்லாரும் போய் தூங்குங்க என சொல்லி சமாளித்து அனுப்பிவிடுகிறான். அதன்பின்னர் தனம் கிச்சனில் இருக்கும் போது மூரத்தி அவளிடம் பேச வர, அவனிடம் எல்லார்க்கிட்டயும் சொல்ல சொன்னா ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க என சண்டை போடுகிறாள். அதற்கு மூர்த்தி இன்னைக்கு இல்லன்னா என்ன நாளைக்கு சொல்லிறேன் என சமாளிக்கிறான். இத்துடன் இன்றைய தினத்திற்கான எபிசோட் நிறைவடைகிறது.

Advertisement

Advertisement