• May 17 2024

சினேகாவை பிரசன்னா இப்படித்தான் அழைப்பாரா..? பிறந்தநாள் பதிவில் வெளியான உண்மை...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரசன்னா. இவர் மணிரத்னம் தயாரிப்பில் 2002 இல் வெளிவந்த 'பைவ் ஸ்டார்' என்ற திரைப்படத்தின் மூலமாகவே முதன்முதலில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 'கஸ்தூரி மான், அழகிய தீயே, சீனா தானா, கண்ட நாள்முதல்' எனப் பல படங்களிலும் தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கின்றார்.


இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாகத் திகழ்ந்து வந்த நடிகை சினேகாவை 2012 இல் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். பின்பு 2015 ஆம் ஆண்டு இத்தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 2020 இல் இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது. 

பிரசவத்திற்கு பின் சினேகா சில காலம் சினிமாவில் இருந்து விலகி தான் இருந்தார். அதன் பின் உடல் எடையை தற்போது குறைந்திருக்கும் அவர் டீவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கி இருக்கிறார். அவற்றில் நடுவராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.


இந்தநிலையில் சினேகாவின் காதல் கணவன் பிரசன்னா இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இவரிற்கு க்யூட்டான போட்டோ ஒன்றின் மூலமாக வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றார் சினேகா.

அதாவது "என் அம்மா, அப்பா, கணவன், அண்ணா, தம்பி எல்லாமே நீயே. என் முழு உலகமும் நீ தான். உன்னை நான் ரொம்பவே நேசிக்கிறேன்" எனக் கூறி அப்புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு பிரசன்னாவை ஆனந்த கடலில் மூழ்கச் செய்திருக்கின்றார்.


இதனைப் பார்த்த பிரசன்னா அப்பதிவிற்கு கீழே "தாங்க்ஸ் கண்ணம்மா" எனத் தன்னுடைய காதல் மனைவிக்கு பதிலளித்திருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களினையும் பிரசன்னாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement