• May 18 2024

சூரியை விஜய் சேதுபதி கொலை செய்யாததற்கு இதுதான் காரணமா..? விடுதலை படத்தில் இடம்பெற்ற டுவிஸ்ட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் விடுதலை.இப்படத்தில் சூரி காவலராகவும், விஜய் சேதுபதி வாத்தியார் பெருமாள் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர்.


இந்தப் படத்தினுடைய கதையில் பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியையும், அவருடைய மக்கள் படையையும் காவல் துறை சிறப்பு படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகிறது.

அந்தவகையில் இந்த சிறப்பு படையில் கார் டிரைவராக சூரி பணிபுரிகிறார். இந்த சமயத்தில் பெருமாள் வாத்தியாரின் உறவுக்கார பெண் ஆகிய தமிழரசி மீது காதலில் விழுகிறார் சூரி. இந்நிலையில் சிறப்பு படையில் சூரியை கொலை செய்ய மக்கள் படை பயங்கரமாகத் திட்டம் திட்டியது. இருப்பினும் பெருமாள் வாத்தியாரான விஜய் சேதுபதி அதற்கு கொஞ்சமும் அனுமதி கொடுக்கவில்லை.


அதுமட்டுமல்லாது சூரியை கொல்ல வேண்டாம் என்றும் மக்கள் படையில் இருப்பவர்களிடம் உறுதியாக கூறிவிட்டார் விஜய் சேதுபதி. இதற்கு என்ன காரணம் என்று படம் பார்த்த பலருக்கும் தெரியவில்லை. ஆனால் தற்போது ரசிகர்கள் பலரும் அதனைத் தெரிந்து கொண்டுள்ளனர்.

அதாவது தன்னுடைய உறவுக்கார பெண்ணான தமிழரசியை சூரி காதலிப்பதை விஜய் சேதுபதியை தெரிந்துகொள்கிறார். அதாவது திரையரங்கு ஒன்றிற்கு சூரி மற்றும் தமிழரசி இருவரும் படம் பார்க்க சென்றிருப்பார்கள். அப்போது விஜய் சேதுபதியும் சூரியின் பின் வரிசையில் அமர்ந்திருப்பார்.


இந்த சம்பவத்தை படம் பார்க்கும் போது பலரும் கவனிக்கவில்லை என்றாலும், தற்போது வைரலாகி வருகிறது. அந்தவகையில் சூரி தமிழரசியை காதலிப்பதை தெரிந்துகொண்டதால் தான் சூரியை கொல்ல வேண்டாம் என விஜய் சேதுபதி முடிவு செய்திருக்கின்றார்.

எது எவ்வாறாயினும் அதற்கான உண்மைக் காரணம் இதுதானா என்பதை விடுதலை இரண்டாம் பாகத்தின் மூலமாகத் தெரிந்து கொள்வோம்.

Advertisement

Advertisement