பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியாகிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து இயக்குநர் இப் படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுப்பதற்கு தீர்மானித்திருந்தார்.
தற்போது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாக இது இருக்கிறது. இதனால் இயக்குநரும் இப் படத்தினை ஒரு பெரிய பட்ஜெட்டில் எடுப்பதற்கு தீர்மானித்துள்ளார். அதாவது கிட்டதட்ட ஒரு 80 கோடி பட்ஜெட் போட்டுள்ளார். இப் படத்தினை ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனம் , மற்றும் அன்னபூரணி பட தயாரிப்பாளர் மற்றும் சீ டிவி இணைந்து தயாரிப்பதற்கு தீர்மானித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது சீ டிவி இந்த பட தயாரிப்பில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்கள் தீர்மானித்த பட்ஜெட் செலவினை கொடுக்க முடியாமையினால் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படத்தின் வேலைகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Listen News!