தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டானவை. அந்த வகையில் எல்லா சீரியல்களிலும் தற்போது டாப் 3 இடத்தில் இருக்கும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
சகோதர உறவை மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்பட்டதால் இதற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்
அது மட்டுமன்றி இதில் கதிர் முல்லை எனும் கதாப்பாத்திரத்திற்கு என்று இந்த சீரியலை பார்ப்பவர்கள் அதிகம் .இதில் முல்லையாக நடித்த விஜே சித்ரா இறந்ததன் பிற்பாடு முல்லையாக நடித்து கலக்கி வந்தார் காவியா.
மேலும் அந்த தொடரில் இருந்து விலகுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். அது ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கியது.
அடுத்த முல்லை யார் என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மனதில் எழுந்தது. அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது.
அதாவது சிப்பிக்குள் முத்து தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த லாவண்யா தான் இனி புது முல்லையாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சிப்பிக்குள் முத்து கடந்த வாரம் நிறைவு பெற்ற நிலையில், லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.
Listen News!