தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரின் நடிப்பில் தற்போது 'சாகுந்தலம்', 'குஷி' மற்றும் 'யசோதா' படங்கள் உருவாகி வருகின்றன. இதில் 'யசோதா' படமானது தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வருகிற நவம்பர் மாதம் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் ஆனது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சமந்தா தற்போது ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார். அதாவது தனது சமூக வலைதளப் பக்கத்தில், கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கு டப்பிங் பேசுவது போல் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில் "சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது" எனக் கூறியிருந்தார்.
மேலும் "குணமடைந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குணமடைய நான் எதிர்பார்த்ததை விட அதிக நாள் எடுத்துக் கொண்டது. இந்த நோயில் இருந்து குணமடைய இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்" எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இவரின் இந்தப் பதிவினைப் பார்த்த பல திரைப்பிரபலங்களும் ஓடி வந்து தங்களது ஆறுதலினைத் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது ஸ்ரேயா சரண் "உங்களுக்கு அன்பும் ஒளியும் எப்போதும் கிடைக்கும், நீங்கள் எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறீர்கள்" எனக் கூறி இருக்கின்றார்.
அதேபோன்று ஹன்ஷிகா "உங்களுக்கு என்னுடைய அரவணைப்பை பகிர்ந்து கொள்ளுகின்றேன், விரைவில் எல்லாம் சரியாகும்" எனக் கூறியிருக்கின்றார். அதுமட்டுமல்லாது ராஷிக்கண்ணா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, சத்தியராஜ்ஜின் மகள், ஜெயம்ரவியின் மனைவி ஆகியோரும் தங்களது ஆறுதலை தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் இவர்களோடு இணைந்து பல திரைப்பிரபலங்களும் இவர் விரைவில் குணமடைய வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர். இவர்களின் இந்த ஆறுதல் பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதோ அந்தப் பதிவு.
Listen News!