• Apr 19 2024

சமந்தாவுக்கு ஆறுதல் சொன்னாரா நாகசைதன்யா.? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகையாக திகழ்பவர் தான் நடிகை சமந்தா.இவர் தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டும் என தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.



அத்தோடு பல பிரபலங்களும் தமது ஆறுதலை கூறி வருகின்றனர்.அதாவது மயோசிடிஸ் எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் நடிகை சமந்தா. ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் சமூகவலைதள பக்கங்களில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவரது முன்னாள் கணவர் நாகசைதன்யா வாழ்த்து சொல்வாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றிருந்தனர்.இருந்தாலும் இதை மறந்து ஆறுதல் கூறுவாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement