• May 18 2024

குணசேகரனுக்கு தெரிய வந்த உண்மை... அருணைக் காணாது அதிர்ச்சியில் ஜனனி... இறுதியில் ஆதிரை கல்யாணம் கரிகாலனுடன் தானா..?

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜனனி கால் "என்ன நடக்குது அங்க, அருண் இன்னும் வரல" எனக் கூறுகின்றார். பதிலுக்கு அவர் அருண் இன்னும் வரலயா எனக் கேட்கின்றார். இதனை கேட்டதும் ஜனனி ஆச்சர்யமடைகின்றார். 


மறுபுறம் ஜனனி, ஆதிரை இருக்கும் இடம் குறித்த உண்மை குணசேகரனுக்குத் தெரிய வருகின்றது. உடனே குணசேகரன் கரிகாலனை அந்த இடத்திற்குச் செல்ல கிளம்புமாறு கூறுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


இறுதியில் ஜனனியின் திட்டத்தை முறியடித்து குணசேகரன் தான் நினைத்தபடி கரிகாலனுக்கு ஆதிரையை திருமணம் செய்து வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement