இயக்குநர் மணிரத்னம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாகிய நாளிலிருந்து பாசிடிவ் மற்றும் நெக்கடிவ் விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இதனால் வசூல் நிலவரம் பாதிக்கப்படுமா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஆனால் வெளியாகிய 5 நாட்களிலேயே 270 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டது. இதனால் இனி வரும் நாட்களிலும் படம் வசூலில் அள்ளிக் குவிக்கும என்று நம்பப்படுகின்றது. அத்தோடு படக்குழுவினரும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பேல சேனல்களில் பேட்டியளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளை இப்போதே இயக்குநர் மணிரத்னம் தொடங்கிவிட்டாராம். மேலும் பொன்னியின் செல்வன் 2 அடுத்த் ஆண்டு கோடையில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர். மேலும் இப்படம் மொத்தமாக 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!